இஸ்லாம் கேள்வி- பதில்.
இஸ்லாம் கேள்வி- பதில்.
1--மக்கி சூராக்கள் எத்தணை?
பதில். 86
2--மதனி சூராக்கள் எத்தணை?
பதில். 28
3--மக்கி சூராக்கள் எத்தணை வருடங்கள் அருளப்பட்டன?
பதில். 13
4--மதனி சூராக்கள் எத்தணை வருடங்கள் அருளப்பட்டன?
பதில். 10
5--முதல் வஹிக்கும் 2வது வஹிக்கும்இடைப்பட்டகாலங்கள் எவ்வளவு?
பதில். சுமார் 2 வருடம் aa6 மாதங்கள்.
6--முதலில் இறக்கப்பட்ட சூரா எது? அலக்?
பதில். 96
7--இறுதியாக இறக்கப்பட்ட சூரா எது? நஸ்ர்?
பதில். 110
8--நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர் என்ன?
பதில் : வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் (அல்குர்ஆன் 71 : 23)
9--நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : ஆஸர் (அல்குர்ஆன் 6 : 74)
10--நபிகளாரின் மனைவியர்களில் அதிகம் தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தவர் யார்?
பதில் : ஸைனப் (ரலி), நூல் : முஸ்லிம் (4490)
11--ஹூதைபிய்யா உடன்படிக்கை ஏற்க மறுத்த முக்கிய நபித்தோழர் யார்?
பதில் :உமர் (ரலி), நூல் : புகாரீ (2734)
12--ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போர்க்களத்தில் அல்லாஹ் கூறினான்?
பதில் : பத்ர் (அல்குர்ஆன் 3 : 123-125)
13--நபிகளார் காலத்தில் யார் இறந்த போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது?
பதில் : நபிகளாரின் மகன் இப்ராஹீம் (ரலி), நூல் : புகாரீ (1043)
14--கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?
பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)
15--மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)
16--போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?
பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)
17--பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?
பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)
18--யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?
பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)
19--நூஹ் நபி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் ?
பதில் : 950 வருடங்கள் (அல்குர்ஆன் 29:14)
20--வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் யார்?
பதில் : இப்ராஹீம் (அலை), ஸக்கரிய்யா (அலை) (அல்குர்ஆன் 11:72,19 : 8,9)
21--தொட்டில் குழந்தையாக இருந்த போதே பேசிய நபி யார்?
பதில் : ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:29,30)
22--அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார்களின் பெயர் என்ன?
பதில் : யஹ்யா (அலை), ஈஸா (அலை) (அல்குர்ஆன் 19:7, 3:45)
23--ஷஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது?
பதில் : கடன் நூல் : முஸ்லிம் (3832)
24--மலைகளை குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள் யார்?
பதில் : ஸமூத் கூட்டத்தினர் (அல்குர்ஆன் 89 : 9)
25--காரூன் எவ்வாறு அழிக்கப்பட்டான்?
பதில் : இவனையும், இவனது வீட்டையும் பூமிக்குள் புதையுறச் செய்து அல்லாஹ் அழித்தான் (அல்குர்ஆன்28 : 81)
26--இஸ்ரா என்றால் என்ன?
பதில் : ஒரு இரவில் மக்காவிலிருந்து ஜெருஸலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா
வரை நபி (ஸல்) அவர்கள் செய்த பயணத்திற்கு சொல்லப்படும். (அல்குர்ஆன் 17 :
1)
அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA
================================____________==============================
No comments:
Post a Comment