Followers

Saturday, October 13, 2012

இஸ்லாத்தின் தூண்கள் ஜந்து.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


 இஸ்லாத்தின் தூண்கள் ஜந்து.
அல்லாஹ் இவ்வுலகத்தைப் படைத்து அதில் பல் கோடி படைப்பினங்களையும்,கோல்களையும் படைத்து ஒரே நேரத்தில் அவைகளின் தேவைகளை நிறைவு செய்து கொண்டிருக்கிறான்.

அதிலும் சிறந்தவனாக உயர்ந்தவனாக அல்லாஹ் மனிதநைப்படைத்து அம் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்து அவனுக்கு சில கடமைகளையும் நிர்ணயம் செய்து இருக்கிறான்.இஸ்லாத்தின் கடமைகள் அவைகளை முறையாக ஒரு மனிதன் அறிந்து, புறிந்து, தெரிந்து கொள்வது அவனது கடமையாகும்.எனவே இஸ்லாம் ஜந்து தூண்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. இக்கடமைகளை இக்கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் அமைக்கலாம் என நினைக்கிறேன் .அல்ஹம்துலில்லாஹ்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இஸ்லாம் ஐந்து விசயங்கள் மீது கட்டப்பட்டுள்ளது.


1.அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுவது


2.தொழுகையை நிலை நாட்டுவது


3.ஜகாத் கொடுத்து வருவது


4.ரமளான் மாதம் நோம்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5.ஹஜ்ஜு செய்வது
(ஆதாரம்: புகாரி)


இந்த (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78)

1 வது. கலிமா.
லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் யாதெனில் பூமியிலோ, வானத்திலோ உண்மையாக வணங்கப்படுவதற்க்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன். இணை துணையற்றவன் அவனுக்கு நிகராக எதுவுமில்லை . உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம்தான். அவன் தனித்தவன். யாதொரு இணை துணையுமற்றவன்.
மேலும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஒரு அடியான் உறுதியாக சாட்சி கூற வேண்டும்.

அல்லாஹ்வின் ஒருமைத்தன்மையில் அடங்கியிருக்கும் உண்மையான விளக்கத்தையும் அதன் தேவைகளை நிறைவேற்றும் அவசியத்தையும் ஒருவன் உணரத் தொடங்க வேண்டும். அவன் இந்த உண்மையான நம்பிக்கையைத் தன் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தி, அதன் படியே நடக்கத் தொடங்க வேண்டும்.


நபியின் போதனைகளை நம்பி, அவற்றைத் தன் வாழ்க்கையில் கடைபிடித்து, அவர் தடுத்தவற்றை விட்டு ஒதுங்கி, அவருக்கு அல்லாஹ்வால் அருளப்பெற்ற தூதுச்செய்தியின் அடிப்படையிலேயே இறைவனை வணங்கி, வாழ்வதுதான் முஹம்மத் நபியைத் தூதர் என்று ஏற்றுக்கொண்டதன் உண்மையான அடையாளமாகும்.


இறை வரம்பு மீறலை வெறுத்து அல்லாஹ்வின் மீது எவர் முழுமையாக நம்பிக்கை கொள்கிறாரோ திண்ணமாக அவர் மிக உறுதியான-அறுபடாத - பிடிமானத்தைப் பற்றிக் கொண்டவராவார். (அல்குர்ஆன் 2:256)

2 வது தொழுகை.
பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.


இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.


நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைக்கு இறையச்சம் இன்றியமையாததாகும். இறையச்சமற்ற தொழுகை குறையுடைய தொழுகையாகும். எனவே தொழுகையை மிகவும் அச்சஉணர்வுடன் நிறைவேற்றவேண்டும். நாம் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் தொழவேண்டும். தொழுகை இறைவனுடன் உரையாடுவது போன்றதாகும். எனவே தொழுகையில் தொழுகையல்லாத மற்றவற்றை சிந்திப்பது, பேசுவது, ஏதேனும் சாப்பிடுவது, மேலே, வலது, இடது புறங்களிலே திரும்புவது, ஸலாத்திற்கு பதில் சொல்வது மேலும் இதுபோன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது.
3வது ஜகாத்.

ஜகாத் யார் மீது கடமை ? எப்போது கடமை? எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்? யாருக்கு தரவேண்டும்? என ஜகாத்திற்குதிட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது. ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.

ஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்ம்ம் செய்யலாம்.


செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது.


''உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது.'' (அல்குர்ஆன் 59:7)

ஜகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)


ஜகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?

ஜகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம் விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஜகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை. அவர்களிடம் குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள், அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாக வேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும்.

4 வது நோன்பு.

 12 மாதங்களில் ஒரு மாத காலம் இறையச்சத்தோடு அல்லாஹ்வுக்காக பசித்திருந்து, தாகித்திருந்து,இச்சைகளைக் கட்டுப்படுத்தி  பருவ வயதை அடைந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நோற்க வேண்டியது  நோன்பு.
ரமழான் என்பது ஏதோ சில நல்லறங்கள் புரிவதற்கும், பகலிலே பசித்திருப்பதற்காகவும், இரவிலே தொழுவதற்காகவும் கடமையாக்கப்பட்டது என நம்மில் பெரும்பாலோர் புரிந்துவைத்துள்ளனர். உண்மையில் இந்த நோக்கத்தை உள்ளடக்கியதாக மட்டும் இருந்திருக்குமானால் இது போன்று ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் இறைவன் நோன்பை கடமையாக்கியிருப்பான். ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தை தேர்வு செய்து அதில் பசித்திருப்பதை கடமையாக்கியிருக்கிறான் என்றால் அதில் வேறு விஷேச காரணங்கள் இருக்க வேண்டும்.

வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.


"நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது". (அல்குர்ஆன் 2:183)
நோன்பின் உன்னதமான நோக்கத்தை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு ரத்தினச் சுருக்கமாகவும், மிக அழகாகவும் சொல்லிக் காட்டுகிறான்.'நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக' என்ற ஒரு வார்த்தையிலேயே, எவ்வளவு அற்புதமான வாழ்வியல் பண்பாட்டினை மனிதனுக்கு போதிக்கும் நோக்கத்தை இறைவன் பொதிந்து வைத்துள்ளான் பாருங்கள்! (சுப்ஹானல்லாஹ்!)

5 வது ஹஜ்.

 மனிதனின் வாழ் நாளில் ஒரு முறை நிறை வேற்றப்பட வேண்டிய கடமை ஹஜ். இது வசதியும்,சென்று வருவதற்கான ஆரோக்கியமும்,இருக்குமானால் அவர் மீது ஹஜ் செய்வது கடமையாகும்.
“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் அமைந்துள்ளது. நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்என்ற உணர்வுடன் கூடும் உலக மகா மாநாடு ஹஜ்.
நொடியும் மாறாத நம்பிக்கை
நாளில் ஐந்து முறை தொழுகை
இயலும் போதெல்லாம் ஜக்காத்
வருடத்தில் ஒரு மாதம் நோன்பு
ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்


இந்த ஐந்து கடமைகளும்தான் இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து தூண்கள்!

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
*******************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA
*********************************************************
 

நலம் விசாரித்தல்

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


நலம் விசாரித்தல்
மனித சமுதாயத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும். சமுதாய நலன்களை முக்கியப்படுத்துவதிலும், மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது.

நோயாளியை நலம் விசாரிப்பது.
நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
1)நோயாளியை உடல் நலம் விசாரித்தல், 2) ஜனாஸாவை (நல்லடக்கம் செய்ய) பின் தொடர்ந்து செல்லுதல், 3) தும்மியவருக்கு (யர்ரஹ்முகல்லாஹ் எனக்கூறி) துஆச் செய்தல், 4) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை (அது நன்மையானதாக இருந்தால் அதனை) நிறை வேற்றி வைத்தல். 5) அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்தல், 6) அழைப்புக் கொடுத்தவருக்கு (விருந்துக்கு) பதிலளித்தல் 7) ஸலாமை (மக்களிடையே) பரப்புதல் ஆகிய (ஏழு) விஷயங்களை நபி(ஸல்) எங்களுக்கு ஏவினார்கள்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஜிப்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) 'ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?' என கேட்பான். அப்பொழுது அடியான், 'என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் 'என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அடியான் 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் 'என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?' என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அடியான். 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், 'என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?' என்று கூறுவான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
இந்த நபிமொழியிலிருந்து விளங்கக்கூடிய சில உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .
ஒருவர் நோயாளியாகி விட்டால் அவரை நலம் விசாரிப்பது எவ்வளவு
பெரிய மகத்துவம் நாளை மறுமையில் அல்லாஹ் மனிதனிடம் எப்படி
நலம் விசாரிக்கிறான் என்பதை நன்றாக உணர முடிகிறது.
நலம் விசாரிப்பது,பசித்தவருக்கு உணவு அழிப்பது,தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டுவது, இது போன்ற கேள்விகளை அல்லாஹ் தனது
அடியானுக்கு உவமானமாகக் கேக்கிறான் என்பதை அல்லாஹ்வின்
அடியான் புரிந்து தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் இந்த நபிமொழியில் காணமுடியும்.

நோய் விசாரிக்கச் செல்வதால் ஏராளமான நன்மைகள்.

நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை உடல் நலம் விசாரித்தால், அவரிடமிருந்து அவர் திரும்பும் வரை 'குர்பத்துல் ஜன்னா'வில் ஆகிடுவார். அல்லாஹ்வின் தூதரே 'குர்பத்துல் ஜன்னா' என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அது சுவர்க்கத்தில் பறிக்கப்பட்ட கனிகள் ஆகும் எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : தவ்பான்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்


சுப்ஹானல்லாஹ் ,அல்லாஹ்வின் அருளை எந்த அளவுக்கு ஒரு முஃமீன் பெற்றுக்ககொள்ள வேண்டும் என்பது இந்த ஹதீஸின் விளக்கமாகும் சுவர்க்கத்தில் குர்பத்துல் ஜன்னா என்று சொன்னால்
அது சுவர்க்கத்தி்ல் பறிக்கப்பட்ட கனிகள் இதில் நோயாளியை நலம்
விசாரிக்கச் சென்றவர் இந்தப் பாக்கியத்தை அடைந்து கொள்கிறார்.

நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள்.
அறிவிப்பாளர் : அலி(ரலி)
ஆதாரம் : திர்மிதி


நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் அவர் திரும்பி வரும் வரை
அவறுக்காக மலக்குமார்கள் பிராத்தை செய்வார்கள் .
இன்று நமது வாழ்க்கையை சற்று உற்று நோக்க வேண்டும் .
எந்த நோக்கத்துக்காக ஒரு அடியான் நலம் விசாரிக்கச்செல்கிறான் என்றால் நான் பணத்தில் பெரியவன் என்னை மக்கள் மதிக்க வேண்டும்.
நல்லவன் என்று சொல்ல வேண்டும். புகழ் கிடைக்க வேண்டும்.
நான்கு பேர் சொல்ல வேண்டும் இந்த மனிதர் இன்றைக்கு இந்த நோயாளியை நலம் விசாரித்தார் என்று சொல்ல வேண்டும் என்ற
நோக்கங்களும். நாளை மறுதினம் மேடைகளில் பேசும் போது இன்ன
மனிதர் நோயாளியாக இருந்தார் யாருமே போக வில்லை நான் போனேன். என்று சத்தமாக பேசுவதையும் நாம் பார்க்கிரோம்.
நஊதுபில்லாஹ் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். நபியவர்கள்
சொன்னார்கள் எண்ணங்களைக்கொண்டே கூலி கொடுக்கப்படும் என்று
நபியவர்கள் அருமையான முறையில் சொல்லி இருக்கும் நபிமொழியை நாம் எல்லோரும் அறிந்து தெரிந்து வைத்திருக்கின்றோம்.
மலக்குமார்களின் பிராத்தனைக்கு நாம் ஆலாக வேண்டுமானால்
நல்லன்னத்தோடு நலம் விசாரிக்க வேண்டும்.


நோயாளிக்கு ஆறுதல் கூற வேண்டும்.

ஒருவர் நோயாளியை நலம் விசாரிக்கச்சென்றால் அவரிடத்தில் அறுதலான வார்த்தைகலை முன் வைக்க வேண்டும். அவருடைய
மனம் சந்தோஷம் அடைகின்ற நல்ல பல வார்த்தைகளை கூறி அவருக்காக துஆ செய்ய வேண்டும்.


ஒரு காட்டரபி நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது நபி(ஸல்) அவர்கள், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் சென்றால், லாபஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் (பரவாயில்லை)
'அல்லாஹ் நாடினால், குணமாகும்' எனக் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி

நபி(ஸல்) அவர்களிடம் யாராவதொருவர், தம் நோயைப் பற்றியோ, தம் புண்ணைப் பற்றியோ, காயத்தைப் பற்றியோ முறையிட்டால், அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்கள் நடுவிரலை பூமியில் வைத்து பின்னர் உயர்த்தி 'பிஸ்மில்லாஹ் துர்பத்தி அர்ளினா, பிரீகதி பஃளினா யுஷ்பா பிஹி ஸகீமுனா பிஇத்னீ ரப்பினா'

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால், (இது) எங்கள் பூமியின் மண், எங்களில் சிலரின் எச்சியுடன் கலந்துள்ளது. எங்கள் இரட்சகனின் கட்டளையால், இதனைக் கொண்டு எங்களின் நோயாளி குணமடைவார் என கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக!' மேலும் ''அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு'

பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று ஏழு முறை கூறுவீராக!
அறிவிப்பாளர் : அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ் (ரலி)
அதாரம் : முஸ்லிம்

நோயாளிக்காக பிராத்தை செய்வதை நபியவர்கள் நமக்கு காட்டி இருக்கிறார்கள் .குறிப்பிட்டவர் மாத்திரம் தான் துஆ செய்ய வேண்டும்
என்றில்லை நலம் விசாரிக்கச் சென்றவர் யாராயினும் சரி நோயாளிக்கு
துஆ செய்ய முடியும்.

எனவே அல்லாஹ் நம்மை இழ்வுலகத்தில் ஒரு உன்னத நோக்கத்துக்காப் படைத்திருக்கிறான்.

அதிலும் அல்லாஹ் மனிதனுக்கு சில கடமைகளையும்,பொறுப்புக்களையும்
வழங்கி இருக்கிறான்.
ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் ஜெய்ய வேண்டிய கடமைகள்.
அல்லாஹ் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்.
என்று பல கடமைகலையும், உரிமைகளையும் அல்லாஹ் மனிதனுக்கு
வழங்கி இருக்கிறான். இதில் மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய
கடமைகள் மேலே கூறப்பட்டவைகள் இந்தக் கடமைகளை முறையாக
ஒரு மனிதன் செய்யும் போது அதற்கு நன்மைகள் வழங்குவது அல்லாஹ்வின் தனிப்பட்ட கடமை.


எனவே வாழ்ந்து விட்டோம் அதிகமான காலங்கள், வீணாகி விட்டது
அதிகமான நேரங்கள். வாழப்போவது குறிகிய காலங்கள் அந்தக் கால்ப்பகுதியில் ஏராளமான நந்மைகளை நாமும் செய்து பிரரையும்
அதன் பக்கம் அழைக்கக்கூடிய நன் மக்களாக வல்லவன் அல்லாஹ்
நம் எல்லோரையும் மாற்று வானாக .ஆமீன்
.........................................................................0000000000.......................................................................
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,அனுராதபும், SRI LANKA
****************************************************** 
 

இறை வசனங்கள்

 
 
இறை வசனங்கள்

39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.


39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;


39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால் , நானும் முத்தகீன் – பயபக்தியுடையவர்களில் – ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும் ;


39:.58. அல்லது: வேதனையை கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகி விடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;


39:59. (பதில் கூறப்படும்) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் (நிராகரிப்பவர்களில்) ஒருவனாக இருந்தாய்.”


39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம (இறுதி தீர்ப்பு) நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரத்தில் இருக்கிறதல்லவா?
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
*******************************