Followers

Wednesday, November 7, 2012

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!
* ஒரு முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை முதலிடம் வகிக்கின்றது.

* ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு அஞ்சி, கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் ஜெயம் பெறுகிறான்.


* ‘யார் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியத்தை விரும்புகின் றாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதை கடமையாக்கிக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ்)


* அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியும், அஞ்சி வாழும் ஒரு மனிதன் உலக ஆசைகளுக்கு விலைபோக மாட்டான்.


* அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதன் மூலம் ஒரு மனிதன் பாவமான, வெறுக்கத்தக்க காரியங்களில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்கிறான்.


* அல்லாஹ்வை அஞ்சி வாழும் ஒரு மனிதன் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கூறியவற்றில் தனக்கு இயலுமான அனைத்து விடயங்களையும் தனது வாழ்வில் எடுத்து நடப்பான்.


* அல்லாஹ்வை அஞ்சி வாழும் ஒரு மனிதன் தனது செயற்பாடுகளை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நோக்கோடு செய்வான்.


அல்லாஹுத்தஆலாவுக்கு கட்டுப்பட்டு நடப்பது


* நேரம் தவறாது கடமையான, ஸ¤ன்னத்தான தொழுகைகளை தொழுதல்.


* நோன்புகளை நோற்றல்


* ஸகாத்தை வழங்குதல்


* ஹஜ் செய்தல்


* நபி (ஸல்) அவர்களை தனது உயிரினும் மேலாக விரும்பு தல்.


* அல்லாஹ்வின் படைப்புகளுக்கு உதவி செய்தல்.


* அயலவர்களோடு நல்ல முறையில் நடத்தல்.


* குடும்ப உறவுகளைப் பேணல்.


* வாழ்வின் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் வழிகாட்டல்களைப் பின்பற்றல்


அல்லாஹ்வை கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள்


* அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவோம்.


* சத்தியத்திற்காக வாழும் துணிச்சலைப் பெறுவோம்.


* தீமைகளை களைவதில் உறுதியாக இருப்போம்.


* நன்மைகளை செய்வதில் ஆர்வம் காட்டுவோம்.


* இன்பங்களிலும், துன்பங்களிலும் பொறுமை காப்போம்.


* மன அமைதி கிடைக்கும்.


* பிறர் மீது தப்பெண்ணம் வைக்க மாட்டோம்.


* எங்களுடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கும்.


* என்ன கஷ்டங்கள் வந்தாலும் அல்லாஹ்விடமே கை ஏந்துவோம்.


யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA 
__________________________________________________________________________________

தீமைக்குக் கூலி தீமையே.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

தீமைக்குக் கூலி தீமையே.

"எவர் ஒரு நன்மையைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு அது 
போன்ற பத்து(மடங்கு)ண்டு எவன்ஒரு தீமையைக் கொண்டு 
வருகின்றானோ  அவன்அது போன்றதயே தவிர கூலி 
வழங்கப்படமாட்டான்.அவர்கள் அநியாயம் 
செய்யப்பட மாட்டார்கள். "
  (அல்குர்ஆன். 6:160)

"அங்கேதான் ஒவ்வொரு ஆத்மாவும் தான் முற்படுத்தியதை 
அறிவிக்கும்.மேலும் அவர்கள் உண்மையானதமது பாதுகாவளனாகிய 
அல்லாஹ்வின் பக்கம்மீட்டப்படுவார்கள். அவர்கள்
இட்டுக்கட்டிக்கொண்டிருந்தவை அவர்களை விட்டும் சென்று விடும்."
   (அல்குர்ஆன். 10:30)


"நிச்சயமாக இவர்களுக்கு முன்னுள்ளோரும் சூழ்ச்சி செய்தனர். அதனால் 
அவர்களின் கட்டிடங்களின்அடித்தளங்களால் அல்லாஹ் வந்தான். 
ஆகையால் அவர்களுக்கு மேலிருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது. 
அவர்கள் உணராத விதத்தில் அவர்களிடம் வேதனை வந்தடைந்தது."
  (அல்குர்ஆன். 16:26)

"இதுதான் (அல்லாஹ்வின் வெகுமதியாகும்.) மேலும்,எவர்  தான் 
துன்புறுத்தப்பட்டது போன்று  (தன்னைத்துன்புறுத்தியவனை) 
துன்புறுத்தி, அதன் பின்னர் அவன் மீது அத்துமீறப்படுமானால் 
நிச்சயமாக அல்லாஹ்(பாதிக்கப்பட்ட) இவனுக்கு உதவி செய்வான் 
நிச்சயமாகஅல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவன், மிக்க
 மன்னிப்பவன்."
  (அல்குர்ஆன்.22:60)

"மேலும் எவர்கள் தீமையைக் கொண்டு வருகின்றார்களோ
அவர்கள் முகம் குப்புற நரகத்தில் தள்ளப்படுவார்கள் நீங்கள்
செய்து கொண்டிருந்தவை தவிர வேறு எதனையும் கூலியாக
வழங்கப்படுவீர்களா? "
(அல்குர்ஆன். 27:90) 

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடைவிதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் எண்:10

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போதே தவிர (தனிப்பட்ட முறையில்) தங்கள் கரத்தால் எவரையும் அடித்ததில்லை. எந்தவொரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்கு எதேனும் துன்பம் விளைவித்ததற்காக எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அல்லாஹ்வுக்காக பழி வாங்கியுள்ளார்கள்''. (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்
நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி "முஹ்ம்மதே! உம்மிடமுள்ள அல்லா
ஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்'' என வேண்டிக்கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், "உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!'' என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், "உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக!'' என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)
 
மேல் கூறிய அல்குர்ஆன் வசனங்களும், அல்ஹதீஸ் மொழிகளும்
தீமைக்குக் கூலி தீமையே . இவைகளை சம்பவங்கள் மூலம்
அறிந்து கொள்ள கீழ் இருக்கும் படித்தரம் போதுமானது. 

தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் திருக்குர்அனின் வசனங்கள் எராளம். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் "இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்' என்றும் "அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்' என்றும் கூறுகிறது.
அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

இதன் காரணமாவது அவர்கள் தங்களது கோபத்தை தடுத்துக் கொள்வார்கள். போட்டி, பொறாமை கொள்ளாமல், பகைமை, பொறாமையின் நெருப்புக் கங்குகளை "மறந்து மன்னித்துப் புறக்கணித்தல்' என்ற தண்ணீரால் அணைத்து விடுவார்கள். பரிசுத்த மனதுடன் நிம்மதிப் பெருங்கடலில் நீந்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தம், அல்லாஹ்வின் அன்பு என்ற கரையைத் தொடுவார்கள்.

எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள்.


மிக உன்னதமான உயர்வின்பால் இட்டுச் செல்லும் மன்னித்தல் என்ற அந்த சிரமமான பாதையில் மனித மனங்களைத் திருப்புவதற்கு குர்அன் ஒர் எளிய வழிமுறையை கற்றுத் தந்துள்ளது. ஒரு குற்றத்திற்கு அதற்குரிய தண்டனை என்ற சட்டத்தின்படி அநியாயம் இழைக்கப்பட்டவன் பழிதீர்த்துக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அநியாயம் இழைக்கப்பட்டவர் பழிவாங்கும் உணர்ச்சிக்கு செவிசாய்க்காமல் மன்னித்து சகித்துக் கொண்டால் அவருக்கு உயரிய அந்தஸ்து கிடைக்குமென்று கூறி அவரின் மனதில் மன்னிக்கும் ஆசையை இஸ்லாம் வளர்க்கிறது.


அவர்களில் எவரையும் (எவரும்) அக்கிரமம் செய்தால் அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள். தீமைக்குக் கூலியாக அதைப் போன்ற தீமையையே. (அதற்கு அதிகமாக அல்ல) எவரேனும் (பிறரின் அக்கிரமத்தை) மன்னித்து அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) வரம்பு மீறுவோர்களை நேசிப்பதில்லை.
 அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்:

உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, எழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்ிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு எதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22)

இஸ்லாம், தனது உறுப்பினர்கள் தண்டிப்பது, கண்டிப்பது, சிறிய விஷயங்களுக்கெல்லாம் நீதி தேடி செல்வது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது. மாறாக பொறுமையும், மன்னிப்பும், பெருந்தன்மையுமான நடைமுறைகளையே மேற் கொள்ளும்படி வலியுறுத்துகிறது.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)

ஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகிவிடும். அதன்மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இது தீமைகளைத் தடுத்துக்கொள்ள மிக அழகிய வழியாகும். ஆனால் இப்பண்பு பெரும் பாக்கியசாலிக்கே சாத்தியமாகும். அதையே அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
 எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா.ஹொரோவபதான,அனுராதபுரம்,SRI LANKA.
))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((