Followers

Tuesday, December 4, 2012

அல்லாஹ்வின் அருளை எண்ணிப்பாருங்கள்.

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அல்லாஹ்வின் பெயர் கூறி இப்பகுதியை தரிசனம் செய்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்.....
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே...
ஒரு இனிமையான வேண்டுகோள்,,மனம் என்ற ஒன்று இருந்தால் கேளுங்கள்.. இல்லை என்றால் சொல்லுங்கள் ..
முடிவு அவன் கையில் அல்ஹம்துலில்லாஹ்.


அல்லாஹ்வின் அருளை எண்ணிப்பாருங்கள்.
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)

கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழமுடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.
அல்லாஹ், நுண்ணறிவும் பரிபூரண ஞானமும் மிக்கவன்! அவனையாரும் மிகைத்து விட முடியாது!
எல்லாப் பொருட்களும் அவனது ஆற்றலுக்குட்பட்டது!
நமது சிந்தனையும் ஆற்றலும் அல்லாஹ் வழங்கியதாகும்!
நமது அறிவு சொற்பமானது!
வரம்புகளுக்கு உட்பட்டது!
அல்லாஹ்வுடைய ஆற்றலையும் அவனது நாட்டத்தையும் செயல்பாடுகளையும் குறித்து மனிதனால்கேள்வி எழுப்ப இயலாது!

ஏழைக்கு அவனது ஏழ்மையும்.
நோயாளிக்கு அவனது நோயும்.
ஊனமுற்றோனுக்கு அவனது ஊனமும் சோதனைகளாகும்.
அது போன்றே சிலரைச் செல்வந்தர்களாகவும்,
உடல் நலம், உடல் பலம் மிக்கவர்களாகவும் ஆக்கி அவர்களையும்சோதிக்கிறான்.
இறைவனின் இந்த விதியைப் பொருந்தி கொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டுவாழ்பவர்களே நல்லடியார்கள்.

இவ்வுலகத்தின் நியதியை இவ்வாறு இறைவன் ஆக்கியுள்ளான்.
நாம் வாழும் இந்த பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே
நிறத்தால்,
குணத்தால்,
அறிவால்,
மொழியால்,
உடல் அமைப்பால்

இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

மனிதனின் ஆசைகளுக்கு முடிவே இல்லை.
சுவர்க்கத்தையே அவன் முன் கொண்டு வந்தால்கூட அவன் திருப்தி அடைவதில்லை.
ஆதம், ஹவ்வா ஆகியோர்கள் செய்ததைப்போல் ஒரு தவற்றினை செய்து விடுவது மனிதனின் மனதை மரத்துப்போக செய்வதில்லை. அவன் ஆன்மீக உயர்நிலைகளை அடைய முடியாமல் அவைகள் தடுத்திடுவதில்லை.
அவன் ஒழுக்க நிலைகளில் உயர்வதற்கு அவை தடையாக அமைவதுமில்லை.
மனிதனின் அறிவும், மனமும் பாவத்தை உணர்ந்து கொள்ளும் தன்மை உடையவையே!

அவைகள் அவன் செய்யும் தவறுகளையும் உணர்ந்து கொள்ளும். அவனது குறைகளையும் அவைகள் உணர்ந்து கொள்ளும். இவற்றையெல்லாம் விட அவை யாரிடம் அவன் தனது தவறுகளை பொறுத்தருளும்படி இறைஞ்சிட வேண்டும் என்பதை உணர்த்தும் தன்மை படைத்தவைகளே!
மேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணிவி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்.16:18)
ஓவ்வொரு மனிதனும் அவனது வாழ்வின் ஒவ்வொரு அசைவிற்கும் இறைவனை சார்ந்தே இருக்கிறான். அவன் சுவாசிக்கும் காற்றிலிருந்து அவன் உண்ணும் உணவு வரையும் - பேசும் பொழுது அவன் உபயோகிக்கும் கை அசைவுகள் முதல் - ஆனதந்தமான நேரங்களிலும் இறைவன் அவனுக்காக படைத்து கொடுப்பவற்றிலும் சார்ந்தே இருக்கிறான்.

இருப்பினும் பெரும்பாலனவர்கள் அவனது குறைகளை உணராமலும் அவர்கள் இறைவனிடத்தில் தேவையுள்ளவர்களாக இருப்பதையும் உணராமலும் இருக்கின்றான். இக்கட்டான நிகழ்வுகள் அல்லது அவனது கடின உழைப்பால் அனைத்தையும் பெற்று கொண்டதாக நினைக்கிறான். இது ஒரு பெரிய தவறாகும். மேலும் இவை இறைவனுக்கு எதிரான நன்றி கெட்ட தனமாக கருதப்படுகிறது.

ஒரு முக்கியமில்லாத சிறு பரிசு பொருளுக்காக மனிதர்கள் நன்றி செலுத்துகிறார்கள். ஆனால் இறைவன் அவனுக்கு கொடுத்த எண்ண முடியாத அருள்களுக்கு நன்றி செலுத்தாமல் அவனது வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கிறான். இறைவனது அருள்களை எண்ணி முடிக்க முடியாது.


இருப்பினும் மனிதர்கள் அவர்களுக்கு கிடைத்துள்ள அருள்களுக்கு நன்றி செலுத்துவதில்லை. இதற்கான காரணத்தை குர்ஆன் கூறுகிறது : இறைவனது பாதையிலிருந்து மனிதர்களை வழிக்கெடுப்பதை குறிக்கோளாக கொண்ட ஷைத்தான்- அவனது முக்கிய குறிக்கோள் மக்களை நன்றி கெட்டவர்களாக மாற்றுவது தான் என்று கூறினான். ஷைத்தானின் இந்த கூற்றானது இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
'பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்¢ ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்" (என்றும் கூறினான்). அதற்கு இறைவன், 'நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான் (அல்குர்ஆன்.7: 17-18)
மறுபுறத்தில் இறைவனை விசுவாசிப்பவர்கள் தங்களது குறைபாடுகளை அறிந்து இறைவனுக்கு முன்னால் பணிந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு அருளுக்கும் நன்றி செலுத்துகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட சொத்து சுகங்களுக்காக மாத்திரம் விசுவாசிகள் நன்றி செலுத்துவதில்லை.
அனைத்து பொருட்களினதும் படைப்பாளனும் சொந்தக்காரனும் இறைவன் என்பதை உணர்ந்த விசுவாசி

அவனது நல்ல ஆரோக்கியம்,
அழகு,
அறிவு,
விசுவாசத்தின் மீதான அன்பு ,
நிராகரிப்பு மீதான வெறுப்பு ,
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் அதிகாரம் அனைத்திற்கும் நன்றி செலுத்துகின்றான்.

அவன் சரியான பாதையில் இருப்பதனாலும் விசுவாசிளுடன் சேர்த்து வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான்.
ஒரு அழகான இடம்,
அவர்களது காரியங்கள் இலகுவாக முடிவடைவது,
அவர்களது ஆசைகள் நிறைவேறுவது,
இன்பகரமான செய்திகளை அறிவது,

மரியாதையான செயல்கள் அல்லது மற்ற அருட்கொடைகளானது விசுவாசியை உடனே இறைவன் பக்கம் திருப்புவதோடு அவனுக்கு நன்றி செலுத்தி அவனது கருணைக்காக காத்திருக்கிறான்.

நன்னடத்தைகளுக்காக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அன்பளிப்பு காத்திருக்கிறது. குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரசியங்களில் இதுவும் ஒன்றாகும். நன்றி செலுத்துபவர்களுக்கு இறைவன் அவனது அருள்களை அதிகரிக்கிறான். உதாரணமாக எவர்கள் தங்களிடமுள்ள ஆரோக்கியத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் நன்றி செலுத்துகிறார்களோ இறைவன் அவர்களது ஆரோக்கியத்தையும் அதிகாரத்தையும் அதிகரிக்கிறான.; எவர்கள் தங்களிடமுள்ள அறிவிற்காகவும் சொத்துகளுக்காகவும் நன்றி செலுத்துகிறார்களோ இறைவன் அவர்களது அறிவையும் சொத்துகளையும் அதிகரிக்க செய்கிறான். இதற்கு காரணம் அவர்கள் இறைவன் கொடுத்தவற்றை திருப்தியடைவதோடு இறைவனது அருள்களை பொருந்தி இறைவனை அவர்களது நண்பனாக எடுத்து கொள்வதலாகும்.

(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்¢ (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (அல்குர்ஆன். 14 : 7)

பொய்யான உள்நோக்களை கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை மறைத்து கொள்ளலாம். ஆனால் இறைவனிடம் அது முடியாது. அத்தகயவர்கள் அவர்களது நன்றியை இலகுவான நேரங்களில் அழுத்தமாக தெரிவித்த போதும் அதில் எந்த பயனுமில்லை. ஏனெனில் கடினமான துன்பமான நேரங்களில் அவர்கள் மிக இலகுவாக நன்றிகெட்டவர்களாக மாறிவிடுவார்கள்.

உண்மையான விசுவாசிகள் கடினமான நேரங்களிலும் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். விசுவாசிகளிடம் இருந்து அருள்கள் குறைவடைவதை வெளியிலிருப்பவர்கள் காண்பார்கள். இருப்பினும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் நன்மையென கருதும் விசுவாசிகள் இதிலும் நன்மையையே காண்பார்கள். உதாரணமாக இறைவன் பயத்தையும் பசியையும் சொத்துகளை இழப்பதையும் அல்லது உயிர்பலிகளையும் கொண்டு மக்களை சோதிப்பதாக கூறுகிறான்.


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
******************************
***************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~