Followers

Thursday, December 6, 2012

சின்னச் சின்ன செயல் ஏறாளமான நன்மைகல்

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமம் போற்றி துவங்குகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்...

மனிதனுக்கு அல்லாஹ் சிரமத்தை நாடவில்லை, மனிதன் தன் செயலால்,சிந்தனையால் தனக்குள்ளே பல சிரமங்களை அவ்வப்போது ஏற்படுத்திக்கொள்கின்றான், சின்னச் சின்ன அமலாக இருந்தாலும் அவைகளை தூய்மையாகச் செய்யும் போது ஏறாளமான நன்மைகளை அவன் அடைகின்றான் சுருக்கமாகச் சொன்னால் தன் சகோதரனைப் பாரத்து புன்னகைப்பதும் தர்மம் என்று நபியவர்கள் கூறினார்கள்.
இது போன்று ஏறாளமான நன்மைகளை தருவது நமது செயல் இதன் அடிப்படையில் மனிதன் செய்யவேண்டிய,நன்மைகளைத் தேடவேண்டிய நபிகளாரின் போதனைகளை இங்கே குறிப்பிடுகின்றேன்.நல்லுணர்வு பெருவோர் நிறைவான நன்மைகளைப் பெற்று பிற மக்களுக்கும் செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கவே இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன் இன்ஷா அல்லாஹ் ..அல்லாஹவுக்கே எல்லாப் புகழும்.

முஃமின் மற்றொரு முஃமினுக்கு
உடல்


"ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம்
காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக் கின்றன. அத்துடன் (உடல்முழுவதும்) காய்ச்சல் கண்டு விடுகின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 6011


கட்டிடம்

"ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடக்க வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
நூல் : புகாரி 481


இறந்த வீடு
இறை நினைவில்லாத வீடு


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429

 நபியின் உதாரணம்
கட்டிடத்தின் இறுதி செங்கல்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 3535


கஞ்சனும்,வள்ளனும்

"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1443, 1444, 5797


ஐவேளைத் தொழுகையின் உதாரணம்

'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்' என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071

அன்பளிப்பை திரும்பப் கேட்பவன்
தன் வாந்தியை தின்னும் நாய் போன்றவன்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப்போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (2589)


வளைந்த எலும்பை மேலும் வளைக்காதே!

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3331, 5184, 5186


முஃமினே ஏமாறாதே!

இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6133


குர்ஆன் ஒதுபவரின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று!வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப்போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டுகுர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன்வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின்நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும்கிடையாது.
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 5020


ஸஜ்தாவில் நாயைப் போல் விரிக்காதே!

'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 822, முஸ்லிம் 850


நல்ல நண்பன், கெட்ட நண்பன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்தி ருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையா வது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)
நூல் : புகாரி (2101)


மெளனம் சம்மதமே!

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137


நயவஞ்சகனின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
முஸ்லிம் (5369)


தொழுகையில் ஒட்டகத்தைப் போல் அமராதே!

'உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1079

முஃமினுக்கு உலகம் சிறைச்சாலை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663


அல்லாஹ்வை எப்படி பார்ப்போம்
 
"அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?'' என்று நாங்கள்கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும்சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள்.நாங்கள், "இல்லை'' என்று பதிலளித்தோம். "இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப்போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்''
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7439


சொர்கத்திற்கான அழைப்பை ஏற்றவரின் உதாரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர்’இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்’ என்றார். அதற்கு மற்றொருவர் ‘கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறது’என்று கூறினார். பின்னர் அவர்கள் ‘உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்’ என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’ என்றார். மற்றொருவர் ‘கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது’ என்றார். பின்னர் அவர்கள் ‘இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை’ என்று கூறினர்.
பின்னர் அவர்கள் ‘இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்’ என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’ என்று சொல்ல மற்றொருவர் ‘கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது’என்றார். அதைத் தொடர்ந்து ‘அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்’ என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 7281

பாவமன்னிப்பு கேட்கும்போது இறைவனின் மகிழ்ச்சிக்கான உதாரணம்

ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான், யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான் இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான். இந்த நிலையில் திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான்'' என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4932


நபிகள் நாயகத்தின் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம், நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.
வேறுசில தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்க ளுக்குப் பயன்படச் செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; (பயிரிட்டுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.
அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை.
இதுதான், இறைமார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கின்ற வனுக்கும் உதாரணமாகும்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 4587


பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் உதாரணம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1358, 1359, 1385,


அல்லாஹ்வை நினைவு கூர்வது

இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7563

ஸலாம் கூறுதல்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ”இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

தீங்கு தரும் பொருளை அகற்றுவது

”ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 2472

தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246

நல்ல வார்த்தைகளைப் பேசுதல்

நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

பேரீச்சம் பழத்தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டுத் தப்பியுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ”உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: அபூதாவூத் 1534

பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்

உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 4760

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்

”ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ”எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ”ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2363, 6009

சின்னச் சின்னச் செயல்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளன. அவற்றை நாம் செய்து நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
 

மனிதனைப் பரிகாசம்,ஏளனம் செய்தல்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ...ஒரு மனிதன் எந்தளவுக்கும் இன்னும் ஒரு மனிதனைப் பரிகாசம்,ஏளனம் செய்தல்  என்ற தலைப்பை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...

மனிதன் மண்ணினால் படைக்கப்பட்டு ,அந்த மண் தரையின் மேல் அவனுக்கு வாழ வதிவிடம் கொடுத்து, கொஞ்சக்காலம் அந்த மண் தரையின் மேல் வாழ்ந்து  ,மீண்டும் அம் மண்ணறைக்குள் செல்லும் அளவுக்கு அல்லாஹ் மனிதனை மண்ணினால் படைத்தான். இப்படிப் படைக்கப்பட்ட மனிதன். மனிதன் மனிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்,உரிமைகள் இருக்கின்றது..வெறுமனே வயிற்றில் உருவானோம்,பிறந்தோம், வாழ்ந்தோம்,மரணித்தோம் என்று இருக்கக் கூடாது என்றுதான் "வெறுமனே" என்ற பெயர் இருக்காமல் அது நிறைந்ததாக இருக்க வேண்டும்,அதில் பிரயோசனமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் உண்ணத நோக்கம்.
இதன் அடிப்படையில் மனிதன் மனிதனுக்கு பராகாசம் ,ஏளனம் செய்தால் இது எந்த அளவுக்கு மனிதனின் மோசமான செயல்  என்பன போன்ற சிறு குறிப்பை இன்ஷா அல்லாஹ் கீழே நோக்களாம். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக.


ஆரம்பமாக.... நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்......
‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( புகாரி 7288, முஸ்லிம் 1337,

நபியவர்களின் சொல், செயல், அங்கிகாரம். இந்த அடிப்படையில் நபியவர்கள் தடுத்தவைகளை விட்டும் விளக வேண்டும், நபியவர்கள் ஏவியதை முடிந்த அளவு கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு இடையில் ஹராம்,ஹலால் பிரித்தறிவிக்கப் பட்டும் அதற்குள் வேள்வி கேற்பதை வீண் விவாதம் செய்வதை நபியவர்கள் தடுத்தார்கள் இதனால் தான் அன்றைய சமூகம் அழிவுக்கு உள்ளானார்கள் என்பதை மேலே நபிமொழி நன்றாக உணர்த்துகின்றது.

"எவர்கள் அறியாமை காரணமாகப் பாவம் செய்து,பின்பு விரைவாகவே மன்னிப்பும் தேடுகிறார்களோ அவர்களுக்கே அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. இவர்களுக்கே அல்லாஹ் மன்னிப்பு வழங்குகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும்,ஞானமிக்கவனாக
வும் இருக்கின்றான்."(4:17)

மனிதன் தவறு செய்யக் கூடியவன் அவன் தவறுக்கும் ,மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அறியாமையின் காரணமாக பாவம் செய்து பின்னர் அவன் மனம் வருந்தி அல்லாஹ்விடம் இறைஞ்சும் போது கருணையாளன்,இரக்கமுள்ளவன் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.


"எவர் தீய செயலைச் செய்து , அல்லது தனக்குத் தானே அநியாயம் செய்து,பின்பு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அவர் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் கண்டுகொல்வார்."(4:110)

மனிதன் இன்றைக்கு கண்மூடித் தனமாக மக்களின் பார்வைக்கும், இரகசியமாகவும்,பரகசியமாகவும், பாவத்தில் மூழ்கி இருக்கின்றான். தீய செயல்களை செய்தவனாக, தனக்கும் பிறருக்கும் அநியாயம் செய்தவனாக இருக்கின்றான். எனவே இப்படியான மனிதனை அல்லாஹ் மன்னிக்கின்றான். அவன் பாவ மன்னிப்புக் கேற்கும் போது மாத்திரம். இது அல்லாமல் அவனுக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்வே மாட்டான்.

"நிராகரித்தோருக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது. (அதனால்) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை பரிகசிக்கின்றனர். (அல்லாஹ்வை) அஞ்சி நடப்போர்தாம் மறுமை நாளில் அவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். மேலும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குவான்."(2:212)

இவ்வுலக வாழ்க்கை ஒரு அற்பமான ஒன்று இந்த உலகம் நிரந்தரமற்றது மறுமையோ முடிவே இல்லாத வாழ்க்கை என்பது அல்லாஹ்வின் போதனை .இதை மனிதன் அல்லாஹ்வை மறந்தவன் .இவ்வுலக வாழ்க்கையை கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற மனிதன் பிற மனிதனை ஏளனம் செய்கின்றான், தரங்குறைவாகப் பார்க்கின்றான். இவ்வுலக வாழ்க்கை நிராகரிப்பாளர்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது, முஃமின்களுக்கு ஒரு கட்டுப்பட்டை அமைத்துள்ளது இஸ்லாம் .
ஒரு முஃமினுக்கும், காபிருக்கும் இவ்வுலகம் எப்படி என்பதை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663


"நிச்சயமாக (நபியே!) உமக்கு முன்னுள்ள பல தூதர்கள் பரிகசிக்கப்பட்டனர். அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ, அது அவர்களில் பரிகசித்தோரைச் சூழ்ந்து கொண்டது." (6:10)

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக"உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது" என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்)


நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர். மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம். அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம். இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம். இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்"எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்" (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)

"நம்பிக்கையாளர்களில்,தர்மங்களைத் தாராளத் தன்மையுடன் வழங்குவோரையும் தங்கள் உழைப்பைத் தவிர வேறு எதையும்(தர்மம் செய்யப்)பெற்றுக்கொள்ளாதோரையும் குறை கூறி, ஏளனம் செய்தோரை அல்லாஹ்வும் ஏளனம் செய்கின்றான். இன்னும் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு."(9:79)

"நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் மற்றொரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்யவேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும் பட்டப் பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்டபின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்." (49:11)

இஸ்லாம் மனித வாழ்வின் எல்லாத்துறைகளிலும் வழி காட்டும் ஒருமார்க்கமாக விளங்குவதால், சமூகத்தில் ஒருவருக்கொருவர் எவ்வாறு பழகிக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றது. அவற்றுள் ஒருவரை யொருவர் கேலி பண்ணி கோபமூட்டும் பழக்கத்தை முற்றும் கண்டிக்கின்றது.

இன்றைய உலகில், நல்லோர் தீயோர் என்ற இரு பிரிவினர் இருந்தே வருகின்றனர். தீயோர் என்போர் நல்லோரை இம்சித்தும் – கேலி செய்தும் வஞ்சித்தும் – ஏமாற்றியும் வருவது கவலைக்குரிய விடயமாகும்.

பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர் படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக் காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.

இவ்வாறு பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ அல்லது செயல்களாலோ அல்லது ஏன் நாவால் கூடவோ இருக்கலாம். பிறரைத் துன்புறுத்தி மகிழும் இத்தகைய இழி செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிக கடுமையான தண்டணைகள் காத்திருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.


நாம் கோபத்தினால் ஒருவரைப் பற்றி பலவாறாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: -

“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

மேலே கூறப்பட்ட நபிமொழிகள் மனிதன் இன்னும் ஒரு மனிதனோடு நடந்து கொள்ளும் முறைகளை வரிசைகளாக கூறுகின்றது. ஒரு மனிதனை ஏளனம் செய்வது, குத்திக் காட்டுவது ,புறம் பேசுவது, திட்டுவது பட்டம் சூட்டுவது, இது போன்ற செயல்கள் முஃமினுக்கு ஆகுமானதல்ல என்பதை மேலே சொல்லப்பட்ட குர்ஆன்,ஹதீஸ் அடிப்படைகளை வைத்து உவமானங்கள் மூலம் சொல்லப்பட்ட விடையங்களையும் மனிதனாகிய நானும் நீங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்புமாகும்.


உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ள மாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும்
அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமான மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என அல்குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.


(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குத்தான். (28 : 83)

எனவே காலங்கள் கடந்து செல்லும் இச்சந்தர்ப்பத்தில்..
அடுத்து வரும் வினாடியை உணர்ந்தவர்களாக ..
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரன் என்பதை உணர்ந்து...
நாளை மறுமையில் ஒவ்வொன்ருக்கும் பதில் சொல்லவேண்டும்.என்பதைத் தெளிவாக உணர்ந்து..
தன்னை சீர் திருத்தி விட்டு மற்றவர்களை நல்வழிப்படுத்தும் நன் மக்களாக அல்லாஹ் என்க்கும் ,உங்களுக்கும் நல்லருள் புரிவானாக ,ஆமின்..
 
0000000000000000000000000000000000000000000000000000
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
(((((((((((((((((((((((((((*****************))))))))))))))))))))))))))))