Followers

Thursday, December 6, 2012

மனிதனைப் பரிகாசம்,ஏளனம் செய்தல்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ...ஒரு மனிதன் எந்தளவுக்கும் இன்னும் ஒரு மனிதனைப் பரிகாசம்,ஏளனம் செய்தல்  என்ற தலைப்பை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...

மனிதன் மண்ணினால் படைக்கப்பட்டு ,அந்த மண் தரையின் மேல் அவனுக்கு வாழ வதிவிடம் கொடுத்து, கொஞ்சக்காலம் அந்த மண் தரையின் மேல் வாழ்ந்து  ,மீண்டும் அம் மண்ணறைக்குள் செல்லும் அளவுக்கு அல்லாஹ் மனிதனை மண்ணினால் படைத்தான். இப்படிப் படைக்கப்பட்ட மனிதன். மனிதன் மனிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்,உரிமைகள் இருக்கின்றது..வெறுமனே வயிற்றில் உருவானோம்,பிறந்தோம், வாழ்ந்தோம்,மரணித்தோம் என்று இருக்கக் கூடாது என்றுதான் "வெறுமனே" என்ற பெயர் இருக்காமல் அது நிறைந்ததாக இருக்க வேண்டும்,அதில் பிரயோசனமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் உண்ணத நோக்கம்.
இதன் அடிப்படையில் மனிதன் மனிதனுக்கு பராகாசம் ,ஏளனம் செய்தால் இது எந்த அளவுக்கு மனிதனின் மோசமான செயல்  என்பன போன்ற சிறு குறிப்பை இன்ஷா அல்லாஹ் கீழே நோக்களாம். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக.


ஆரம்பமாக.... நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்......
‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( புகாரி 7288, முஸ்லிம் 1337,

நபியவர்களின் சொல், செயல், அங்கிகாரம். இந்த அடிப்படையில் நபியவர்கள் தடுத்தவைகளை விட்டும் விளக வேண்டும், நபியவர்கள் ஏவியதை முடிந்த அளவு கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு இடையில் ஹராம்,ஹலால் பிரித்தறிவிக்கப் பட்டும் அதற்குள் வேள்வி கேற்பதை வீண் விவாதம் செய்வதை நபியவர்கள் தடுத்தார்கள் இதனால் தான் அன்றைய சமூகம் அழிவுக்கு உள்ளானார்கள் என்பதை மேலே நபிமொழி நன்றாக உணர்த்துகின்றது.

"எவர்கள் அறியாமை காரணமாகப் பாவம் செய்து,பின்பு விரைவாகவே மன்னிப்பும் தேடுகிறார்களோ அவர்களுக்கே அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. இவர்களுக்கே அல்லாஹ் மன்னிப்பு வழங்குகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும்,ஞானமிக்கவனாக
வும் இருக்கின்றான்."(4:17)

மனிதன் தவறு செய்யக் கூடியவன் அவன் தவறுக்கும் ,மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அறியாமையின் காரணமாக பாவம் செய்து பின்னர் அவன் மனம் வருந்தி அல்லாஹ்விடம் இறைஞ்சும் போது கருணையாளன்,இரக்கமுள்ளவன் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்கின்றான்.


"எவர் தீய செயலைச் செய்து , அல்லது தனக்குத் தானே அநியாயம் செய்து,பின்பு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அவர் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் கண்டுகொல்வார்."(4:110)

மனிதன் இன்றைக்கு கண்மூடித் தனமாக மக்களின் பார்வைக்கும், இரகசியமாகவும்,பரகசியமாகவும், பாவத்தில் மூழ்கி இருக்கின்றான். தீய செயல்களை செய்தவனாக, தனக்கும் பிறருக்கும் அநியாயம் செய்தவனாக இருக்கின்றான். எனவே இப்படியான மனிதனை அல்லாஹ் மன்னிக்கின்றான். அவன் பாவ மன்னிப்புக் கேற்கும் போது மாத்திரம். இது அல்லாமல் அவனுக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்வே மாட்டான்.

"நிராகரித்தோருக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது. (அதனால்) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை பரிகசிக்கின்றனர். (அல்லாஹ்வை) அஞ்சி நடப்போர்தாம் மறுமை நாளில் அவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். மேலும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குவான்."(2:212)

இவ்வுலக வாழ்க்கை ஒரு அற்பமான ஒன்று இந்த உலகம் நிரந்தரமற்றது மறுமையோ முடிவே இல்லாத வாழ்க்கை என்பது அல்லாஹ்வின் போதனை .இதை மனிதன் அல்லாஹ்வை மறந்தவன் .இவ்வுலக வாழ்க்கையை கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற மனிதன் பிற மனிதனை ஏளனம் செய்கின்றான், தரங்குறைவாகப் பார்க்கின்றான். இவ்வுலக வாழ்க்கை நிராகரிப்பாளர்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது, முஃமின்களுக்கு ஒரு கட்டுப்பட்டை அமைத்துள்ளது இஸ்லாம் .
ஒரு முஃமினுக்கும், காபிருக்கும் இவ்வுலகம் எப்படி என்பதை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663


"நிச்சயமாக (நபியே!) உமக்கு முன்னுள்ள பல தூதர்கள் பரிகசிக்கப்பட்டனர். அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ, அது அவர்களில் பரிகசித்தோரைச் சூழ்ந்து கொண்டது." (6:10)

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக"உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது" என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்)


நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர். மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம். அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம். இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம். இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்"எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்" (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)

"நம்பிக்கையாளர்களில்,தர்மங்களைத் தாராளத் தன்மையுடன் வழங்குவோரையும் தங்கள் உழைப்பைத் தவிர வேறு எதையும்(தர்மம் செய்யப்)பெற்றுக்கொள்ளாதோரையும் குறை கூறி, ஏளனம் செய்தோரை அல்லாஹ்வும் ஏளனம் செய்கின்றான். இன்னும் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு."(9:79)

"நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் மற்றொரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்யவேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும் பட்டப் பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்டபின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்." (49:11)

இஸ்லாம் மனித வாழ்வின் எல்லாத்துறைகளிலும் வழி காட்டும் ஒருமார்க்கமாக விளங்குவதால், சமூகத்தில் ஒருவருக்கொருவர் எவ்வாறு பழகிக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுகின்றது. அவற்றுள் ஒருவரை யொருவர் கேலி பண்ணி கோபமூட்டும் பழக்கத்தை முற்றும் கண்டிக்கின்றது.

இன்றைய உலகில், நல்லோர் தீயோர் என்ற இரு பிரிவினர் இருந்தே வருகின்றனர். தீயோர் என்போர் நல்லோரை இம்சித்தும் – கேலி செய்தும் வஞ்சித்தும் – ஏமாற்றியும் வருவது கவலைக்குரிய விடயமாகும்.

பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர் படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக் காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.

இவ்வாறு பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ அல்லது செயல்களாலோ அல்லது ஏன் நாவால் கூடவோ இருக்கலாம். பிறரைத் துன்புறுத்தி மகிழும் இத்தகைய இழி செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிக கடுமையான தண்டணைகள் காத்திருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.


நாம் கோபத்தினால் ஒருவரைப் பற்றி பலவாறாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: -

“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

மேலே கூறப்பட்ட நபிமொழிகள் மனிதன் இன்னும் ஒரு மனிதனோடு நடந்து கொள்ளும் முறைகளை வரிசைகளாக கூறுகின்றது. ஒரு மனிதனை ஏளனம் செய்வது, குத்திக் காட்டுவது ,புறம் பேசுவது, திட்டுவது பட்டம் சூட்டுவது, இது போன்ற செயல்கள் முஃமினுக்கு ஆகுமானதல்ல என்பதை மேலே சொல்லப்பட்ட குர்ஆன்,ஹதீஸ் அடிப்படைகளை வைத்து உவமானங்கள் மூலம் சொல்லப்பட்ட விடையங்களையும் மனிதனாகிய நானும் நீங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்புமாகும்.


உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ள மாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும்
அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமான மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என அல்குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.


(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குத்தான். (28 : 83)

எனவே காலங்கள் கடந்து செல்லும் இச்சந்தர்ப்பத்தில்..
அடுத்து வரும் வினாடியை உணர்ந்தவர்களாக ..
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரன் என்பதை உணர்ந்து...
நாளை மறுமையில் ஒவ்வொன்ருக்கும் பதில் சொல்லவேண்டும்.என்பதைத் தெளிவாக உணர்ந்து..
தன்னை சீர் திருத்தி விட்டு மற்றவர்களை நல்வழிப்படுத்தும் நன் மக்களாக அல்லாஹ் என்க்கும் ,உங்களுக்கும் நல்லருள் புரிவானாக ,ஆமின்..
 
0000000000000000000000000000000000000000000000000000
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
(((((((((((((((((((((((((((*****************)))))))))))))))))))))))))))) 
 

No comments:

Post a Comment