Followers

Thursday, November 1, 2012

அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலம் ஏற்படும் பிரயோசனங்கள்.


அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலம் ஏற்படும் பிரயோசனங்கள்.

* அல்லாஹ்வின் அன்பையும், அவன் பால் நெருக்கத்தையும்
உண்டுபண்ணும். இன்னும் அவனைப் பற்றிய கண்ணியத்தையும்,
அவன்  என்னைக் கண்காணிக்கின்றான் என்ற  எண்ணத்தையும்
தோற்றுவிக்கும். மனிதன் திருந்தி  அவன் பக்கம் மீள்வதற்கும் ,
அவனை வழிப்பட்டு அமல் புரிவதற்கும் உதவியாய் இருக்கும்.


* கவலைகளை நீக்கி   சந்தோஷத்தையும் உளத்தூய்மையையும்,
தைரியம் போன்ற நற்குணங்களையும் உருவாக்கும்.

* உள்ளத்தில் ஒருவித வெறுமை நிலை உண்டு. அதனை திக்ரின்
மூலம் மாத்திரமே நிரப்ப முடியும்.

* திக்ரின் மூலம் உள்ளத்தில் உள்ள நோய்கள் அகன்று  அது
சுத்தமடைவதுடன்  வேறு எதனாலும் பெற முடியாத ஓர் 
இன்பத்தையும்  உள்ளம் உணர்கின்றது.  மாறாக அல்லாஹ்வின்
ஞாபகத்தை விட்டும் மறந்திருப்பது  உளநோய்க்கான 
அறிகுறியாகும்.

* ஒருவன் ஏதேனும் ஒரு பொருளை விரும்பி விட்டால் அதனை
அதிகம் ஞாபகப்படுத்துதைப் போன்று திக்ரின்  மூலம் அல்லாஹ்வின்
மீதுள்ள அளவு கடந்த அன்பு வெளிப்படுகின்றது. மேலும் திக்ர்  செய்தல்
குறைவாக இருப்பது நயவஞ்சத் தன்மையின் அடையாளமாகும்.

* ஒரு அடியான் செழிப்பான காலத்தில் அல்லாஹ்வை நினைவு
கூர்ந்தால்  அவனுக்குக் கஷ்டம் ஏற்படும் போது அல்லாஹ் அவனை
நினைவு கூறுவான்.

* அல்லாஹ்வின்  வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெருவதற்கான
காரணமாகவும் ஸகீனத் எனும் மன நிம்மதியும், அமைதியான
சூழலும் உருவாவதற்கும் அல்லாஹ்வின் அன்பும், வானவர்களின்
பாவமன்னிப்புத் தேடலும் கிடைப்பதற்கு உதவியாகவும் அது
அமைந்திருக்கின்றது.

* புறம் பேசுதல், கோள் சொல்லல், பொய், வீண் பேச்சு  போன்ற
தடுக்கப்பட்ட காரியங்களில் நாவு ஈடுபடாது  திக்ர் பாதுகாக்கின்றது.

* திக்ர் செய்வது  வணக்க வழிபாடுகளில் மிகச் சிறந்ததும்  நாவுக்கு
மிக  இலேசான அமலுமாகும். மேலும் செய்யப்படும்  திக்ருகளின்
அளவு  சுவர்க்கத்தில் மரங்கள் நட்டப்படுகின்றன.

* திக்ர் உலகத்திலும்,  மண்ணறையிலும்,  மறுமையிலும் அதனைச்
செய்வதற்கு பிரகாசமளிக்கின்றது. இன்னும் அவனுக்கு உள்ளத்தில்
இன்பத்தையும் முகத்தில் அழகையும் கௌரவத்தையும்
ஏற்படுத்துகின்றது.

 * திக்ரின் மூலம் அல்லாஹ்வின் பாவமன்னிப்பும், வானவர்களின்
துஆவும் கிடைக்கின்றது. இன்னும் அல்லாஹ் திக்ர் செய்பவர்களைப்
பற்றி வானவர்களிடம்  பெருமை பாராட்டுகின்றான்.

* அமல் செய்யக்கூடியவர்களில் மிகச் சிறந்தவர்  அல்லாஹ்வை
அதிகம்  திக்ர் செய்பவராகும்.  நோன்பாளிகளில் மிகச் சிறந்தவர்
நோன்பிருக்கும் நிலையில்  அதிகம் திக்ர் செய்பவராகும்.

* திக்ர் கஷ்டங்களை இலகுபடுத்தும். அத்துடன் வசதி வாய்ப்பை
உருவாக்கி உடம்பைப் பலப்படுத்தும்.

 பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்" என்றார்கள். "இதனை விட சிறந்த பயிரை உமக்கு நான் சொல்லித் தரவா?" என்று கேட்க, "சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்" என்றார்கள்.(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா 3797)


குறிப்பு: .  இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மீனுக்குத் தண்ணீரைப் போன்று உள்ளத்திற்கு திக்ர்
அவசியமாகும். தண்ணீரை விட்டு வெளியானால் 
மீனின் நிலை என்னவாகும்.? 
என்ற வாசகத்தை திக்ர்க்கும் உள்ளத்திற்கும் உதாரணமாக
மீனின் நிலையை சுட்டிக்காட்டினார்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~*********~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதயம் சார்ந்த அமல்கள்

  
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளஹி பவரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் பெயர் கொண்டு....

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ் உங்கள் 
உருவங்களேயோ , செல்வங்களையோ பார்க்கமாட்டான் மாறாக
உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்."
(நூல். முஸ்லிம்)

எனவே இதயம் என்பது அறிதல், ஆராய்தல், சிந்தித்தல் என்பவற்றின்
இடமாகக் காணப்படுகின்றது.  இதனால்தான் மனிதர்கள் அல்லாஹ்
-விடத்தில் உள்ளத்தில் இருக்கும் ஈமான்.  உறுதி, தூய்மையான
எண்ணம் போன்றவற்றின் மூலமாகவே வித்தியாசப்படுகின்றார்கள்.
ஹஸன் அல் பஸரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அபூபக்கர்(ரலி)
அவர்கள் ஏனைய சஹாபாக்களை அவர்களின் அமல்கள் மூலம்
முந்தவில்லை. அவருடைய உள்ளத்தில் தரிபட்டிருந்த ஈமானின் 
மூலமாகவே அவர்களை முந்தினார்கள்.

இதயம் சார்ந்த அமல்கள் உறுப்புகள் சார்ந்த அமல்களை விட
பல விதங்களில் வித்தியாசப்படுகின்றன.

1-  இதயத்தைச் சார்ந்த அமல்கள் சீர் குலையும் போது உறுப்புகள் சார்ந்த
அமல்கள் சீர் குலைந்து விடுகின்றன.
(உதாரணம்க. முஹஸ்தூதி.)

2-  இதயம் சார்ந்த அமல்களே அடிப்படையானவை. உள்ளத்தில் எந்த
நாட்டமுமின்றி  உறுப்புகளால் வெளிப்படும்  வார்த்தைக்கு , செயலுக்கு
நன்மை வழங்கப்பட மாட்டாது.
(உதாரணமாக. சமூகத்துக்கு மக்கள் பார்வாக்கு செய்யும் உதவி.)

3-  அவை மறுமையில் உயர் பதவிகளைப் பெறுவதற்கு காரணமாக
அமைகின்றன.
(உதாரணமாக. உலகப்பற்றின்றிருத்தல்)

4-  உறுப்புகள் சார்ந்த அமல்களை விட இவை மிகக் கஷ்டமானவை.
இன்னும் முன்கதிரி(ரஹ்)அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் 40 வருடங்கள்
கஷ்டப்பட்டதன் பின்பே என் இதயம் சீராகியது.
(உதாரணமாக. பொடுபோக்காய் இருந்து மனம் திருந்தியமை.)

5-  அவை சிறந்த நன்மைகளை உடையவை.
(உதாரணமாக. அல்லாஹ்வின் பேரில் அன்பு கொள்ளல்.)

6-  அவை மகத்தான கூலியைப் பெற்றுத்தரக்கூடியது. அபூ தர்தா(ரலி)
அவர்கள் கூறினார்கள். ஒரு மணித்தியாலம் சிந்திப்பது ஒரு இரவு
நின்றுவணங்குவதைவிடச் சிறந்தது.
(உதாரணமாக. உள்ளத்தில் கவலையின் பிறப்பிடம் உதிப்பது.)

7-  அவை உறுப்புகளையும் தூண்டிவிடக் கூடியவை.
(உதாரணமாக. ஒரே சிந்தனை)

8-  அவை உறுப்புகளின் அமல்களின் கூலியை அதிகப்படுத்துகின்றன,
அல்லது குறைத்து விடுகின்றன.அல்லது  அழித்து விடுகின்றன.
(உதாரணமாக. தொழுகையில் உள்ளச்சம்.)

9-  அவை உறுப்புகளின் அமல்களுக்குப் பகரமாக அமைகின்றன.
(உதாரணமாக. செல்வம் இல்லாத சந்தர்ப்பத்தில் ஸகாத் கொடுப்பதற்கு
 நீய்யத் வைத்தல்.)
  
10-  அவற்றின் கூலிக்கு எல்லையில்லை.
(உதாரணமாக. பொறுமை.)

11-  அவற்றின் கூலி உறுப்புகள் தடைப்படும் போதும் அல்லது அவை
செயல்பட முடியாத போதும் தொடரும்.
(உதாரணமாக.நோயுடைய காலம்.)

12-  அவை உறுப்புகள் அமல் செய்வதற்கு முன்னாலும் செய்யும் போதும்
இருந்து கொண்டிருக்கும்.
(உதாரணமாக. அல்லாஹ்வின் பயம்.)

 மேலே கூறப்பட்ட அவை அவை  என்ற வார்த்தைகள் இதயத்தைக் குறிக்கும்.

 அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


பெண்களுக்கான சட்டம்


ஒரு பெண் வீட்டிலுருந்து வெளியாகும் போது பின்வரும் நிபந்தனைகள்
பூரணமாகக் காணப்படும் அங்கியால் தனது உடலை மறைப்பது
கடமையாகும்..

1- முழு உடம்பையும்  மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
2- அவ்வாடை  கவர்ச்சியானதாக இருக்கக்கூடாது.
3- உடம்பை மறைக்காத அளவு மெல்லியதாக  இருக்கக்கூடாது.
4- இறுக்கமானதாக இல்லாமல்  விசாலமானதாக இருக்க வேண்டும்.
5- மனம் பூசப்படாததாக  இருக்க வேண்டும்.
6- ஆண்ககளின்  ஆடைக்கு ஒப்பானதாக இருக்கக்கூடாது.
7- மாற்று மத பெண்களின் ஆடைக்கு ஒத்ததாதக இருக்கக்கூடாது.
8- பிரபல்யத்தை ஏற்படுத்தும் ஆடையாக இருக்கக்கூடாது.


மற்றவர்களுடன்  ஒரு பெண் பேணவேண்டிய அவ்ரத் 
மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் மூன்று வகை.

1- கணவனின் முன்னிலையில்.   கணவன் அவளுடைய  உடம்பில்
    எந்தப் பகுதியையும் பார்ப்பதற்கு அனுமதி உண்டு.
2- பெண்களுக்கும், மஹ்ரமான ஆண்களுக்கும் முன்னிலையில்.
    இவர்களுக்கு  முன் முகம், முன் கை முன் கால்  போன்ற சாதாரன
    நிலையில் தெரியும்  பகுதிகளை வெளிப்படுத்தலாம்.
3- அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில்.  இவர்களுக்கு  முன் பெண்
பார்ப்பது ,மருத்துவத்தேவை என்பவற்றுக்கன்றி  முழு உடம்பையும்
மறைப்பது கடமையாகும். ஏனெனில் பெண்களின் பித்னா அவர்களுடைய
முகத்தில் தான் இருக்கிறது.

இத்தா மேற்கொள்ளும் பெண்கள் பல பிரிவினராகும்.

1- கர்ப்பிணிப் பெண்.  
    இப்பெண் தலாக் அல்லது கணவனின் மரணம்  என்பவற்றிற்காக
    பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா அனுஷ்டிக்க வேண்டும்.
2- கணவன் மரணமான பெண்.
    இப்பெண் 4 மாதங்களும் 10 நாட்களும் இத்தா அனுஷ்டிக்க வேண்டும்.
3- தலாக் சொல்லப்பட்ட மாதவிடாய் ஏற்படக்கூடிய சதாரண பெண்.
    இவள் மூன்று மாதவிடாய் ஏற்படும் காலம் இத்தா இருக்க வேண்டும்.
    தலாக் சொன்னதிலிருந்து மூன்ராவது மாதவிடாய் சுற்றிலிருந்து
    துப்பரவானதுடன் இத்தா முடிவடைந்து விடும்.
4- மாதவிடாய் ஏற்படாத பெண்.
    இவளின் இத்தாவுடைய காலம்  மூன்று மாதங்களாகும்.
    இத்தாவின் காலத்தில் மீட்டெடுக்க முடியுமான விதத்தில்  தலாக்
    சொல்லப்பட்ட ஒரு பெண் தனது இத்தாக் காலத்தில் கணவனுடனேயே
    தொடர்ந்து இருப்பது கடமையாகும்.  இத்தா முடியும் வரை கணவன்
    அவளை நினைத்த விதத்தில் பார்ப்பதும், அவளுடன் தனித்திருப்பதும்
    கூடுமானதாகும். 

மாதவிடாய் (ஹைளு) 

ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமிருந்து இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தையே இது குறிக்கின்றது. மாதவிடாயானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடலாம்.
 'இன்னும் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள், நீர் கூறும்'அது தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டும் விலகி இருங்கள் மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்' (2:222)

இஸ்திஹாளா.  

இது மாதவிடாயிலிருந்து வித்தியாசமாகும். இஸ்திஹாளா என்பது ஒரு பெண்ணுக்கு தொடராக வெளிவரும் இரத்தம். இந்நிலையில் அவள் மீது தொழுகை, நோன்பு, கடமையாகும் என்பதனை அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

'எனக்கு (மாதவிடாய் காலங்களில்) நிற்காது இரத்தம் வெளிவருகின்றது. ஆதனால் நான் சுத்தமாக இல்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என பாத்திமா பின்த் அபீ ஹுபைஸ் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' அது ஓர் இரத்த நாலத்தலிருந்து வருவதாகும். நீர் வழமையாக மாதவிடாய்உண்டாகும் நாட்களுக்கு மட்டும் தொழுகையை விட்டுவிடும் பின்னர் குளித்துவிட்டு தொழுகையை மேற்கொள்ளும்' என்றார்கள் (புகாரி)

உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள், ''இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். (நூற்கள்: அபூதாவூத், இப்னுமாஜா) 

எனவே உதிரப்போக்குடையவள் வழமையாக மாதவிடாய் காலத்தை தவிர்ந்த ஏனைய காலங்களில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்

 நிஃபாஸ் 

பிரசவத்திற்கு பின்னோ அல்லது பிரசவத்திற்கு சற்று முன்னோ வெளியாகும் இரத்தத்தையே நிஃபாஸ் என்பர். பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான்.

 கடமையான குளிப்பு

மாதவிடாய் உண்டான ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமானதும் குளிப்பது கட்டாயக் கடமையாகும்.

மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எவ்வாறு குளிப்பது?

மர்மஸ்தலத்தை கழுவவேண்டும் பின்னர் தொழுகைக்கு உழூச் செய்வது போன்று செய்துவிட்டு கால்களை கழுவ முன் குளித்துவிட்டு சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவவேண்டும். 

'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உழூச் செய்வது போன்று உழூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது'' என மைமூனா(ரலி) அறிவித்தார். (புகாரி 249)

கடமையான குளிப்பு குளிக்கும் போது தலையையும் உடலையும் நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி எமக்கு கிடைப்பது அறிதாகவுள்ளதால் வாசனையுள்ள சோப் பயன்படுத்திக்கொள்ளலாம் 

'உங்களில் ஒவ்வொருவரும் ஸித்ர் மரத்தின் (இலைகள் கலந்த) நீரைப் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் நீரை ஊற்றி மயிரின் வேரை சென்றடையும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் (நீரை) ஊற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு கஸ்தூரி கலந்த பருத்தித் துன்டொன்றை எடுத்து அதன் மீது சுத்தம் செய்து கொள்ள வேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்இ அப்போது 'அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது? என்று வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். இரத்த அடையாளங்கள் நீங்கும் வரை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்'(ஸஹீஹ் முஸ்லிம்)

 மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடை

மாதவிடாய் இரத்தம் பட்டை இடத்தை நீரால் கழுவிவிட்டு அதையே அணிந்து கொள்ளலாம். அதிலே தொழுதும் கொள்ளலாம்.

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கüல் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெüத்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுதுகொள்ளலாம்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)  நூல் : புகாரீ (307) 

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக்கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்)ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக்கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்யமாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக்கொள்வார்கள். என்னிடமிருந்து ஏதேனும் அவர்கள் மீது பட்டுவிடுமானால் அவ்வாறே செய்துவிட்டு அந்த ஆடையுடனே தொழுதுகொள்வார்கள். 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : தாரமீ (995)

 தொடர் உதிரப்போக்கு

சில பெண்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் பல நாட்கள் தொடர்ந்து இரத்தம் வந்துகொண்டிருக்கும். இது ஒரு நோய். ஆனால் இதை சிலர் மாதவிடாய் என கணித்து தொழமாமல் இருந்துவிடுகின்றனர்.
வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகை நோன்பு உடலுறவு போன்ற விஷயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகும் இரத்தம் தொடர்ந்து வருமானால் அப்போது குளித்துவிட்டு மாதாவிடாய் ஏற்படாத பெண் எவ்வாறு நடந்துகொள்வாளோ அதுபோன்று தொடர் உதிரப்போக்கு ஏற்படுபவர்கள் நடந்துகொள்ள வேண்டும். இவர்கள் தொழுகையையும் நோன்பையும் விடுவதற்கு அனுமதியில்லை. 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப்போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது இந்த நோய் வருவதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்துகொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்து விட்டுத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு அவள் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)  நூல் : நஸயீ (351)

 நிர்வாணமாக குளிக்கக்கூடாது

ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாக குளிக்கக்கூடாது. அவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள். 
 அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)நூல் : அபூதாவுத் (3501)

இவைகளை கட்டாயம் ஒவ்வொரு பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய
முக்கியமான விடையங்கள் இவைகளில் கவணக் குறைவு ஏற்படுமானால்
நாம் வாழும் வழ்க்கை அல்லாஹ்வுக்கு பொருத்தமற்றதாக மாறிவிடம்.
இன்ஷா அல்லாஹ் இவைகளைப் படித்து தன் வாழ்க்கையில் கடைப்
பிடித்து நம் உற்றார் உறவினர்களுக்கும் கற்றுக்கொடுத்து ஸலிஹான
பெண்களாக நாமும் மாறுவதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் 
நல்லருள் புரிவானாக ஆமீன். 
**********************************************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

தடுக்கப்பட்ட சில விடையங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

தடுக்கப்பட்ட சில விடையங்கள்.

அடுத்தவர்களை நோக்கமாகக் கொண்டு நல்லமல்கள் செய்வது.

வல்ல அல்லாஹ் கூறுகின்றான் . நான் இணைவைக்கப்படுவதை
விட்டும் மிகவும் தேவையற்றவன். எவரேனும் ஒரு நல்லமலைச்
செய்து அதில் என்னுடன் வேறொருவரை இணைத்துக்கொண்டால்
அவனது இணைவைத்தலுடன் அவனை நான் விட்டு விடுவேன்.

உள்ளரங்கம் கெட்டு வெளிரங்கம் சீராயிருத்தல்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நான் சில கூட்டத்தினரை அறிவேன்.
அவர்கள் நாளை மறுமையில் திஹாமாவில் காணப்படும் வென்நிற
மலைகளைப் போன்ற நன்மைகளுடன் வருவார்கள்.அல்லாஹ் 
அவற்றைப் பரத்தப்பட்ட புழுதியைப் போன்றதாக ஆக்கி விடுவான்.
அப்போது ஸப்வான்(ரலி)அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின்
தூதரே! அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனக் கூறி  அவர்களை 
எங்களுக்குத் தெரிவித்து விடுவீர்களாக!. இல்லையெனில் நாங்கள்
அறியாமலே அவர்களில் நின்றும் ஆகிவிடுவோம். அப்பொழுது 
நபியவர்கள் கூறினார்கள். அவர்கள் உங்கள் சகோதரர்கள்.உங்களைப்
போன்றவர்கள். நீங்கள் இரவில் நின்று வணங்குவதைப் போன்று
நின்று வணங்குவார்கள். ஆனால் அவர்கள் தனிமையில் தடுக்கப்பட்ட
-வற்றைச் செய்ய சந்தர்ப்பம் அமைந்தால் அவற்றைச் செய்து 
விடுவார்கள்.

பெருமை.

யாருடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கிறதோ
அவர் சுவர்க்கம் நுழைய மாட்டார். பெருமை என்பது  உண்மையை 
மறைப்பதும், மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதுமாகும்.

ஆடைகளை கரண்டைக்குக் கீழால் அணிதல்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆடைகளைத் தொங்க விடுவது
வேட்டி போன்ற வற்றிலும், மேலாடை என்பவற்றிலும் இருக்கிறது.
யார்  பெருமைக்காக இவற்றில் ஒன்றை  தொங்க அணிகிறாரோ
அவரை அல்லாஹ் மறுமையில்  பார்க்கமாட்டான்.

பொறாமை.

பொறாமை கொள்வதை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன். நெருப்பு
விரகை எரிப்பதைப் போன்று பொறாமை  நன்மைகளை அழித்துவிடும்.

வட்டி.

வட்டி சாப்பிடுபவனையும், அதைச் சாப்பிடக்கொடுப்பவனையும்
நபியவர்கள் சபித்துள்ளர்கள்.ஒருவன்  தெரிந்து கொண்டே வட்டியினால்
கிடைத்த ஒரு வெள்ளிக் காசை அதனளவு சாப்பிடுவது 36 தடவை
விபச்சாரம் செய்வதை விடவும் கொடியதாகும்.

மது அருந்துதல்.

வழமையாக மது அருந்துபவனும், சூனியத்தை செய்பவனும், குடும்ப
உறவை பிரித்து நடப்பவனும் சுவனம் நுழைய மாட்டான். யார் மது
பாணம் அருந்துகின்றானோ அவனது எந்தத் தொழுகையும் 40 நாட்களுக்கு அங்கிகரிக்கப்பட மாட்டாது.

பொய்.

மக்களை சிரிக்கவைப்பதற்காகப் பொய் பேசக் கூடியவனுக்குக் கேடு
உண்டாவதாக என மூன்று தடவைகள் நபியவர்கள் கூறினார்கள்.
அப்படி என்றால்  சிரிப்பு அல்லாமல் மனிதன் நிஜமாக சொல்லும்
பொய்களுக்கு எவ்வளவு பெரிய பாவம் என்தை நாம் விளங்க 
வேண்டும்.

மற்றவரின் குறைகளைத் துருவி ஆராய்தல்.

ஒரு கூட்டம் விரும்பாத நிலையில் அல்லது அவர்கள் தவிர்க்க விரும்பும்
நிலையில் அவர்களது பேச்சை இரகசியமாக செவிமடுத்தால் மறுமை
நாளில் அவனுடைய காதில்  ஈயம் உருக்கி ஊற்றப்படும்.

உருவம் அமைத்தல்.

 மறுமை நாளில் மனிதர்களில் அதிகம் வேதனை செய்யப்படுபவர்கள்
உருவம் அமைத்தவர்களாகும். நாயும், உருவப் படமும் உள்ள வீட்டில்
மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

கோள் சொல்லுதல்.

கோள் சொல்லுபவன் சுவனம் நுழைய மாட்டான். கோள் என்பது 
மக்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்துவதற்காக  ஒருவரது
பேச்சை மற்றவரிடம் கூறுவதாகும்.

புறம் பேசுதல்.

புறம் பேசுதல் என்ன என உங்களுக்குத் தெரியுமா? என்று நபியவர்கள்
கேட்ட பொழுது  அல்லாஹ்வும் அவனது தூதருமே  அறிவார்கள் என
சஹாபாக்கள் கூறினார்கள். அப்பொழுது நபியவர்கள்  உனது சகோதரன்
விரும்பாத விதத்தில் அவனைப் பற்றி  அவன் இல்லாத இடத்தில் 
பேசுவதாகும். என்றார்கள். நான் கூறும் விடையம் அவனிடம் இருந்தாலும் அது புறமாகுமா?  எனக் கேட்டபோது நீர் கூறும் விடயம்
அவனிடமிருந்தால் அவனைப் பற்றி நீர்  புறம் பேசியவர் ஆவீர்.
அது அவனிடத்தில் இல்லாவிட்டால்  அவனே மீது அபாண்டம் சுமத்தி
விட்டவர் ஆவீர். எனப் பதிளலித்தார்கள்.

சபித்தல்.

ஒரு முஃமீனை சபிப்பது அவனைக் கொலை செய்வது போன்றாகும்.
காற்றை நீங்கள் சபிக்க வேண்டாம் என கட்டளையிடப்பட்டுள்ளது.
சாபத்துக்கு தகுதி இல்லாத ஒன்றை யாராவது சபித்தால் அச்சாபம்
அவனுக்கே வந்து சேரும்.

இரகசியத்தை வெளிப்படுத்துதல்.

தனது மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டு அவளுடைய
இரகசியத்தை  வெளிப்படுத்தும் ஒரு மனிதன்  மறுமை நாளில் 
அல்லாஹ்விடத்தில் மனிதர்களில் மிகக் கெட்டவனாவான்.

அறிவின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்குதல்.

யாருக்காவது அறிவின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டால் அதன் பாவம்
அத்தீர்ப்பை வழங்கியவரையே சாரும்.

அல்லாஹ்வுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சு.

நிச்சயமாக ஒரு அடியான்  கவனயீனத்தால்  அல்லாஹ்வுக்கு வெறுப்பை
 ஏற்படுத்தக்கூடிய  வார்த்தையைப் பேசிவிடுவதால் எழுபது வருடங்கள்
விழும் தூர ஆழத்தில் நரகில்  விழுகின்றான்.

சகோதர ,சகோதரிகளே.  தடுக்கப்பட்ட விடயங்கள் என்ற தலைப்பில்
ஒரு சில விடையங்களை மேலே கூறப்பட்டுள்ளது. இன்னும் நிறைய
விடயங்கள் இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த ஆக்கங்களில்
சந்திக்கலாம்  இவைகள் அல்குர்ஆன் அல்ஹதீஸ் அடிப்படையில் விளக்கங்களாக எழுதப்பட்டுள்ளது.
 ========================================================================

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````