Followers

Sunday, December 9, 2012

காலத்தின் தேவையும்,பெற்றோர்களின் அவசியமும் குழந்தை வளர்ப்பு...

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

காலத்தின் தேவையும்,பெற்றோர்களின் அவசியமும் குழந்தை வளர்ப்பு...

இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைகள்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக புதுமணத் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத்தான்.

சிலருக்கு இறைவனின் கருணையால் குழந்தைப் பேறும் கிடைத்துவிடுகின்றது. ஆனால் கிடைத்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குகிறார்களா?

குழந்தை வளர்ப்பு என்பது அந்தக் குழந்தையை பாலூட்டி, சீராட்டி, நடை பயிலும் காலம்வரை கண்காணிப்பது மட்டுமல்ல. உண்மையிலேயே பால்குடிப் பருவம் முதல் நடை பயின்று பள்ளிப் பருவம் வரை அன்போடு வளர்ந்த எத்தனையோ குழந்தைகள் பெரியோர்கள் ஆனதும் ஒழுங்கீனத்தில் ஊற்றுக்கண்களாக நடப்பு சமுதாயத்தில் கெட்ட முன்மாதிரியாக உருவெடுப்பதைக் காணமுடிகின்றது. இன்னும் சிலர், பெற்றோர்களோ பெருமிதம் கொள்ளும் அளவிற்கு நன்நடைத்தைகளும், தொழுகை போன்ற வணக்கங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்க்கின்றோம்.

அவர்களது பழக்க வழக்கங்கள் பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். நன்பர்கள் நன்மையின் பக்கம் செல்பவர்களாகவும் தீமையை வெறுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ நன்பர்களின் நட்பு அவர்களை தீமையின் பக்கம் சென்று வழி தவறிவிடுகிறார்கள். இதனை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்கள் அலட்சியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

பெற்றோர்கள் அவசியம் ஏற்படும்பொழுது அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்கானித்து அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின் ரகசியத்தையும் . இன்று உலக அளவில் பார்க்கிறோம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்த பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்களாகவும், இவ்வாறு பொருப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின் பிள்ளைகள் சமுதாயத்திற்கு கேடாக அமைந்து இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அடைவார்கள்.


“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:28)

பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து பிள்ளைகளை வளர்ப்பதில் தங்கள் கடமைகளை பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினால் அந்தப் பிள்ளைகள் ஒரு போதும் அவர்களுக்கு எதிரியாக மாட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
(அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி)

இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.

பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (பார்க்க புகாரி 1385)
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

இறைத் தூதர்களின் இந்த வழி காட்டுதல்களின் அடிப்படையில் நடந்தவர்களில் ஒருவர் தான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கவாதி என்று முன்னறிவிப்புச் செய்யப் பட்டவர்கள். தம் குழந்தையை இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பதில் முக்கியத்துவமும் அதிக அக்கறையும் எடுத்துள்ளார்கள் என்பதற்கு நாம் முதலில் எடுத்துக் காட்டிய ஹதீஸ் சான்றாக உள்ளது.

"என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்)". (அல்குர்ஆன் 31:16-19)

லுக்மான் அலைஅவர்கள் தன் மகனுக்கு அறிவுறை செய்தார்கள் இது அல்குர்ஆனில் பொதிந்திருக்கும் வாசகம் இதை குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் எல்லாக் கட்டுறைகளிலும் காணலாம் ,காரணம் இந்த லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்குப் போதித்த போதனை உலகம் அழியும் வரை இந்த உலகில் வாழ்கின்ற எல்லாக் குழந்தைகளுக்கும்,பெற்றோர்களுக்கும் ஒரு முக்கிய பாடம் என்பதை யாரும் மறந்து விடவேண்டாம்.

முரணான காரியங்களில் ஈடுபடும் பிள்ளைகளை மார்க்க சிந்தனையின் பக்கம் நாம் திருப்ப வேண்டும்.மறுமை நாள் ஏற்படும் போது நாம் எவ்வளவு தான் பாசம் வைத்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. மறுமை நாளில் ஒவ்வொருவரும் தம் நிலையைத் தான் பார்ப்பார்களே தவிர அடுத்தவர்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பிள்ளையாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் சரியே!
அல்லாஹ் அல்குர்ஆனில் இதையும் கூறுகின்றான்.

"பயங்கர சத்தம் வந்து விட்டால்" ,"அந்நாளில் மனிதன் தன் சகோதரனையும்", "தன் தாயையும்", "தன் தந்தையையும்","தன் மனைவியையும்","தன் பிள்ளைகலையும் விட்டு விரண்டோதுவான்."
(80:33,34,35,36)

குழந்தை விஷையத்தில் பெற்றோர்களே . . கவனமாக இருங்கள் ஈமானைப் பரிபூரணமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்,
இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
 
குழந்தைகளுக்கு அறிவுறை செய்யுங்கள்.

அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.

இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய பிராத்தனைகளைக் கற்றுக் கொடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் கொடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.

பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.


நம்மில் எத்தனை பேர் நம்முடைய குழந்தைகளை குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதக் கூடியவர்களாக உருவாக்கி இருக்கிறோம்? இறைவன் திருமறையில், ‘இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்’ என்று ஒரே சூராவில் சூரத்துல் கமர் என்ற ஒரே சூராவில் திரும்ப திரும்ப நான்கு முறை கூறுகின்றான். ( 54:17) (54:22) (54:32) (54:40)
எனவே குர்ஆனைக் கற்றுக்கொடுங்கள், குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தை அடைவதற்காக முயற்சியும் செய்யுங்கள்,

நாம் சொர்க்கம் செல்வதற்கு, நம்முடைய நல்ல அமல்கள் மறுமை நாளில் நமக்கு உதவிசெய்யும். நம்முடைய நற்செயல்களைத் தவிர மற்றவர்களுடைய நற்செயல்களின் மூலமாகவும் சொர்க்கம் செல்ல முடியும்! அதற்கான வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.


‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் அருமையான போதனை! நாம் நம்முடைய குழந்தைகளை மார்க்க போதனைகளுடன் வளர்த்து இருந்தால், நாம் இறந்தபிறகு, நமக்காக நம் குழந்தைகள் கேட்கக்கூடிய துஆக்கள் மூலம், மறுமை நாள்வரை நமக்கு நன்மைகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத ஒன்று நிச்சயமாக நன்மைகள் வந்து கொண்டே இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே காலத்தின் தேவை நம் பிள்ளைகளை நல்வழிக்குக் கொண்டு வருவது ,நன்நடத்தைகளைப் பழக்குவது, தீமைகளை விட்டும் தடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
இன்ஷா அல்லாஹ் நல்லதொரு திட்டத்தை, வாழ்கை என்ற புதிய பாடத்தை நம் பிள்ளைகளுக்கு கற்றும்,கற்பித்துக் கொடுக்கும் நல்ல பெற்றோர்களாக மாறுவதற்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக .ஆமீன்.
******************************
*******************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
*****************~~~~~~~~~~
~~~~~~~***************
 

இஸ்லாம் என் உயிர்



இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய சகோதரத்துவம்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

இதையும் நல்மனதோடு படியுங்கள்...

சகோதரத்துவம் என்பது வெறும் சித்தாந்தமாக பேசப்பட வேண்டிய கொள்கையல்ல.
அது இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய உறவாகும்.
ஆனால் இன்றைக்கு இந்த உறவு முறை பெரும்பாலானவர்களிடத்தில் எப்படி இருக்கிறதென்றால் திருமணம் போன்ற சந்தோஷமான நேரங்களில் கூடி மகிழ்ந்து விட்டு செல்வதும்,
மரணம் நிகழ்நது விட்டால் அவ்விடத்துக்கு வந்து சோகமாக இருந்து விட்டுப் போவதுமாகத்தான் இன்றைய சகோதரத்துவம் இருக்கிறது.
அடுத்த வினாடி......அடுத்த நாள்....அடுத்த வாரம்.....அடுத்த மாதம்....
எங்கே நம் சமூக உறவுகள்,சகோதரத்துவங்கள் எங்கே ....சிந்திப்போம்,செயல்படுத்துவோ
ம்,சகோதரர்களாக,,,,,,

“எ
ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோதரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர்வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும், ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும், குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது...என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)

எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

இன்றைக்கு சகோதரத்துவ உறவை ஆழ்மனதில் உற்று நோக்கும் போது கவலைக்கிடமாக இருப்பதை நாம் எல்லோரும் உணர முடியும்.
சகோதரத்துவத்தை எவ்வாறு பேண வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாம் நமக்கு ஒரு பாடதிட்டத்தையே வழங்குகிறது. முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த விஷயங்களை கடைபிடித்தால் சகோதரத்துவம் மேலோங்கும், சகோதரத்துவம் பாதிப்படையாமல் இருக்க எந்த விடயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மிக விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் சகோதரத்துவத்தின் உயரிய நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால்…
ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும்.

”எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 61:4)

ஆம், ஈயத்தால் வார்த்து உருவாக்கப்பட்ட சுவர் எப்படி உறுதியானதாக இருக்குமோ, எவ்வளவு பிணைப்பாக, வலிமையாக இருக்குமோ, அதைப்போன்று முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அந்த சுவரினுள் ஓட்டையோ, விரிசலோ விழாதவாறு பார்த்துக்கொள்வது ஈமான் கொண்ட ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.

சகோதரத்துவத்தை பேணுவதற்கும், உறவுமுறைகளை அனுசரித்து செல்வதற்கும் நமக்கு தேவையான குணம் பெருந்தன்மையும், மன்னிக்கும் பழக்கமும். மனிதர்கள் ஒரு சமூகமாக வாழும்போது சில கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் ஏற்படுவது இயல்பு. ஒரு வீட்டில் வசிக்கின்ற உடன்பிறந்த சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு கருத்து நிலவுவதில்லை. ஒரு சமூகம் எனும்போது கருத்து வேறுபாடுகள் இயல்புதான். ஆனால் அந்த கருத்து வேறுபாடுகள் சமூகத்தில் பிரிவினைகளையும், ஒற்றுமையை குலைப்பதாகவும் அமைந்து விடக் கூடாது. ஒற்றுமையின்மையும், பிரிவினையும் முஸ்லிம் சமூகத்தின் பலத்தை வீழ்த்திவிடும்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 8:46 )

எனவே சகோதரத்துவம் பேணப்படவேண்டும்.
உருக்கமான ,நிறைவான பாசம் பேணப்பட வேண்டும்.
பணம் பதில் சொல்லாது. சகோதரத்துவம் பதில் சொல்லும்.
உலகில் சகோதரத்துவத்தைத் தேடவேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.
மனிதனின் மானத்தை விலைக்கு வாங்குவது முறையற்றது.
சமூகத்தோடு சேரவில்லை என்றால் அவன் பிணம்.
தனக்கு விரும்புவதையே தன்னுடைய பிற முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும். அதனுடைய உயரிய நிலை எதுவென்றால், தனக்கு தேவையிருப்பினும், தன்னுடைய முஸ்லிம் சகோதரனுடைய தேவைக்காக முன்னுரிமை தருவது ஆகும்.

சகோதரத்துவம்- பரஸ்பரப் புரிந்துணர்வு- வன்முறைகள் இல்லாத அமைதியான வாழ்க்கை ஆகியவற்றையே இஸ்லாம் ஊக்குவிக்கின் றது. கூட்டுறவையும் சகிப்புத் தன்மையையும் அது போதிக்கின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகள் இன்றைய உலகில் காணப்படும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதற்கு வழிகாட்டுவதுடன் உன்னதமான மானிடப் பெறுமானங்களையும் ஊக்குவிக்கின்றது.

எனவே- முஹம்மத் நபி (ஸல்) அவர் களின் போதனைகளின் ஒளியில் சகிப்புத் தன்மை- புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த புதியதோர் சமூகத்தை இந்த  உலகில் நாம் கட்டியெழுப்ப முடியும். இன்ஷா அல்லாஹ் எல்லோரும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள்.சென்ற காலம் முடிந்து விட்டது,தன்னறிந்த தவறுகள்,தன்னறியாத தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், இனி வர இருக்கும் அடுத்த வினாடியே நமது புதிய நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 
******************************************************

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~