Followers

Sunday, December 9, 2012

இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய சகோதரத்துவம்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

இதையும் நல்மனதோடு படியுங்கள்...

சகோதரத்துவம் என்பது வெறும் சித்தாந்தமாக பேசப்பட வேண்டிய கொள்கையல்ல.
அது இதயத்தாலும், உணர்வுகளாலும் பிணைந்திருக்க வேண்டிய உறவாகும்.
ஆனால் இன்றைக்கு இந்த உறவு முறை பெரும்பாலானவர்களிடத்தில் எப்படி இருக்கிறதென்றால் திருமணம் போன்ற சந்தோஷமான நேரங்களில் கூடி மகிழ்ந்து விட்டு செல்வதும்,
மரணம் நிகழ்நது விட்டால் அவ்விடத்துக்கு வந்து சோகமாக இருந்து விட்டுப் போவதுமாகத்தான் இன்றைய சகோதரத்துவம் இருக்கிறது.
அடுத்த வினாடி......அடுத்த நாள்....அடுத்த வாரம்.....அடுத்த மாதம்....
எங்கே நம் சமூக உறவுகள்,சகோதரத்துவங்கள் எங்கே ....சிந்திப்போம்,செயல்படுத்துவோ
ம்,சகோதரர்களாக,,,,,,

“எ
ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோதரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர்வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும், ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும், குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது...என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)

எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

இன்றைக்கு சகோதரத்துவ உறவை ஆழ்மனதில் உற்று நோக்கும் போது கவலைக்கிடமாக இருப்பதை நாம் எல்லோரும் உணர முடியும்.
சகோதரத்துவத்தை எவ்வாறு பேண வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாம் நமக்கு ஒரு பாடதிட்டத்தையே வழங்குகிறது. முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த விஷயங்களை கடைபிடித்தால் சகோதரத்துவம் மேலோங்கும், சகோதரத்துவம் பாதிப்படையாமல் இருக்க எந்த விடயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மிக விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் சகோதரத்துவத்தின் உயரிய நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால்…
ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும்.

”எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 61:4)

ஆம், ஈயத்தால் வார்த்து உருவாக்கப்பட்ட சுவர் எப்படி உறுதியானதாக இருக்குமோ, எவ்வளவு பிணைப்பாக, வலிமையாக இருக்குமோ, அதைப்போன்று முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அந்த சுவரினுள் ஓட்டையோ, விரிசலோ விழாதவாறு பார்த்துக்கொள்வது ஈமான் கொண்ட ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.

சகோதரத்துவத்தை பேணுவதற்கும், உறவுமுறைகளை அனுசரித்து செல்வதற்கும் நமக்கு தேவையான குணம் பெருந்தன்மையும், மன்னிக்கும் பழக்கமும். மனிதர்கள் ஒரு சமூகமாக வாழும்போது சில கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் ஏற்படுவது இயல்பு. ஒரு வீட்டில் வசிக்கின்ற உடன்பிறந்த சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு கருத்து நிலவுவதில்லை. ஒரு சமூகம் எனும்போது கருத்து வேறுபாடுகள் இயல்புதான். ஆனால் அந்த கருத்து வேறுபாடுகள் சமூகத்தில் பிரிவினைகளையும், ஒற்றுமையை குலைப்பதாகவும் அமைந்து விடக் கூடாது. ஒற்றுமையின்மையும், பிரிவினையும் முஸ்லிம் சமூகத்தின் பலத்தை வீழ்த்திவிடும்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 8:46 )

எனவே சகோதரத்துவம் பேணப்படவேண்டும்.
உருக்கமான ,நிறைவான பாசம் பேணப்பட வேண்டும்.
பணம் பதில் சொல்லாது. சகோதரத்துவம் பதில் சொல்லும்.
உலகில் சகோதரத்துவத்தைத் தேடவேண்டும்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.
மனிதனின் மானத்தை விலைக்கு வாங்குவது முறையற்றது.
சமூகத்தோடு சேரவில்லை என்றால் அவன் பிணம்.
தனக்கு விரும்புவதையே தன்னுடைய பிற முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும். அதனுடைய உயரிய நிலை எதுவென்றால், தனக்கு தேவையிருப்பினும், தன்னுடைய முஸ்லிம் சகோதரனுடைய தேவைக்காக முன்னுரிமை தருவது ஆகும்.

சகோதரத்துவம்- பரஸ்பரப் புரிந்துணர்வு- வன்முறைகள் இல்லாத அமைதியான வாழ்க்கை ஆகியவற்றையே இஸ்லாம் ஊக்குவிக்கின் றது. கூட்டுறவையும் சகிப்புத் தன்மையையும் அது போதிக்கின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகள் இன்றைய உலகில் காணப்படும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதற்கு வழிகாட்டுவதுடன் உன்னதமான மானிடப் பெறுமானங்களையும் ஊக்குவிக்கின்றது.

எனவே- முஹம்மத் நபி (ஸல்) அவர் களின் போதனைகளின் ஒளியில் சகிப்புத் தன்மை- புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த புதியதோர் சமூகத்தை இந்த  உலகில் நாம் கட்டியெழுப்ப முடியும். இன்ஷா அல்லாஹ் எல்லோரும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள்.சென்ற காலம் முடிந்து விட்டது,தன்னறிந்த தவறுகள்,தன்னறியாத தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், இனி வர இருக்கும் அடுத்த வினாடியே நமது புதிய நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 
******************************************************

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

No comments:

Post a Comment