Followers

Thursday, November 22, 2012

மனிதன் செய்யும் செயல்களுக்கே கூலி வழங்கப்படும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.

கேட்போம் அல்லாஹ்விடம்..

அல்லாஹ்வின் திருப்பெயர் மொழிந்து அவனைப்புகழ்ந்து

கீழ் இருக்கும் விஷயங்களை பொருமையோடு அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறும் நமது முஸ்லிம்கள் இன்று நாளா பக்கங்களிலும் அவலநிலைகளையும், பிஞ்சு உள்ளங்கள் சித்திரவதைப்படுத்தப்படுதையும் நோக்கமாகக்கொண்டு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோம் நமது நிலமைகளை ஆரம்பத்தில் மாற்றிக்கொள்வோம் என்ற தலைப்பில் இக்கட்டுரையை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன் .அல்ஹம்துலில்லாஹ்....

ஒரு குழந்தை தனது தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதை விடவும் ஒரு அடியான் தன்னைச் சார்நதிருக்க வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான்.

சிறு குழந்தைக்குத் தாய்தான் உலகம் தாய்க்குத்தான் எல்லாமே தெரியுமென்று அக்குழந்தை நம்புகின்றது. ஒரு பொருளை முன்னால் வைத்துக்கொண்டு தாயிடம் கேட்கும் அது என்ன? இது என்ன? ஏன் அது அப்படி? ஏன் இது இப்படி? என்றெல்லாம் தாயிடம் கேட்கும் அக்குழந்தை.
தாய் போகுமிடமெல்லாம் அக்குழந்தையும் சுற்றிச் சுற்றி வரும்.

எதுக்கெடுத்தாலும் உம்மா! உம்மா! என்று சொல்லும் பசியோ, பயமோ, தாகமோ, தாபமோ, மகிழ்ந்தாலும், அழுதாலும் தாயைத்தான் அழைக்கும். குழந்தை முற்றத்தில் வீழ்ந்து விட்டால் அப்படியே அழமால் வரும். தாயைக் கண்டதும் கண்ணீர் மாலை மாலையாய் விழ ஆழுது விடும். காரணம் அக்குழந்தை மற்ற அனைவரை விடவும் தாயை அனைத்தையும் அறிந்தவள் என்று நினைக்கின்றது.


((((இதை அறியாமல் போ, போட, போடி, சனியனே என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள்)))) நஊது பிள்ளாஹ்.
இது போன்று ஒரு அடியான் என்றும் ,எந்நேரமும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். குழந்தை வளர வளர தாயை விட்டும் கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகும். அதன் அறிவு வளர வளர அவன் அல்லாஹ்வுடன் நெருக்கமாகின்றான். ""அடியார்களில் தன்னை அதிகம் பயப்படுகிரவர்கள் அறிவாளர்கள் தாம்"" என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். இதற்கு ஒரு உறுதியான உதாரணமும்,உவமானமும் நபியவர்கள் சொன்னார்கள் ""செருப்பின் வார் அருந்தாலும் அதையும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்"" . என்று சொன்னார்கள்.

மேலே சொல்லப்பட்டவை போன்று நாம் எதுவாக இருந்தாலும் நம்மைப்படைத்த இறைவனிடம் எதையும், எப்போதும் கேட்க வேண்டும் சிறு பிள்ளைக்கு சொல்லப்பட்ட உவமானம் இன்று சுற்றுச் சூழலில் வாழும் நம்மவர்களுக்கு மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு விடையம் தான் சிரு பராயம். அதைத் தாண்டி இருக்கும் நாம் அல்லாஹவிடம் மன்றாட வேண்டும். இன்றைக்கு பலஸ்தீன மக்கள் அவர்கள் நம் சகோதரரகள். அவர்களுக்கு ஒரு வலி ஏற்பட்டால் அது நமக்கும் வலிக்க வேண்டும் .


நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
"ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).

நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!

இன்றைக்கு உலக நாடுகளில் நாளா பக்கங்களிலும் முஸ்லீம்கள் சீரழிக்கப்படுகின்றார்கள், படு கொலை செய்யப்பட்டு அல்லாஹ்வடைய நாட்டப்படி அவர்கள் சஹீதாக்கப்படுகின்றார்கள். நிச்சயம் அவர்கள் சுவர்க வாலிப்ர்களும் கண்ணிகளுமே தவிர வேறு இல்லை அல்லாஹ் போதுமானவன். இவர்களின் இக்கொடூரமான சீர் கேட்டு முறைகளை அழித்தொழிக்க நாம் செய்ய வேண்டியாது நாம் முதலில் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக மாற வேண்டும் ஜந்து வேளை தொழுகைகளில் அழுது புலம்பி பலஸ்தீன மக்களுக்காக அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும் சுன்னத்தான, தொழுகைகள் தஹஜ்ஜூத் போன்ற தொழுகைகளை இன்ஷா அல்லாஹ் நாம் தொழுது வர வேண்டும். முஸ்லீம்களுக்காகவும், நமது குடும்பங்களுக்காகவும் அல்லாஹவிடம் கண்ணீர் விட்டு மன்றாட வேண்டும். அல்லாஹ் இறக்கமுள்ளவன், கருணையுள்ளவன்.. நாம் தினமும் தலைப்புச்செய்திகள் கேட்பது, பத்திரிகைகள் பார்ப்பது அடுத்தவர் சொல்லக் கேட்பது இவைகள் நாம் செய்யும் சாதனைகள் இல்லை. அவர்களுக்கு ஒரு வலி ஏற்பட்டால் நமது கண்கள் கண்ணீர் வடிக்க வேண்டும். அவைகள் அப்படி ஆக வேண்டும் என்றால் நாம் இன்றையில் இருந்து நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். கோபங்கள், குரோதங்கள், விரோதங்கள், கசப்புகள், அசப்புகள், பொறாமைகள் , பெருமைகள் இப்படியான தன்மைகளை விட்டும் ஒரு தாய் மக்களைப்போன்று நாம் நம்மை முதலில் திருத்திக்கொண்டு அல்லாஹவுக்கு நெருக்கமானவர்களாக இறுக்காமான உறுதிகளாக இருப்பதோடு நபியவர்கள் நோற்று வந்த சுன்னத்தான நோன்புகள் கிழமைகளில் நோற்ற நோன்புள் இவைகள் இந்த பலஸ்தீன மக்களுக்காக அவர்களின் விமோசனத்திற்காக நாம் நோற்று அவர்களின் நிம்மதி சந்தோஷங்களுக்காக அல்லாஹவிடம் மன்றாடுவோம்.


நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85

யா அல்லாஹ் எங்களை உனக்கு நன்றி செலுத்தும் மக்களாக மாற்றுவாயாக.!

யா அல்லாஹ் எங்களை தொழுகையாளிகலாக மாற்றுவாயாக.!


யா அல்லாஹ் கஷ்டங்களை அனுபவிக்கும் முஸ்லீம்களுக்கு விமோசனத்தைக் கொடுப்பாயாக.!


யா அல்லாஹ் காபிர்களையும், யூரகளையும் உனது கரத்தால் அழித்தொழிப்பாயாக.!


யா அல்லாஹ் நீ வாக்கழித்தது போன்று இஸ்லாத்தை வெற்றிபெறச்செய்வாயாக.!


யா அல்லாஹ் இஸ்லாம் பரவிய பலஸ்தீனம் மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லீம்கள் கையில் நீயே ஒப்படைப்பாயாக.!


யா அல்லாஹ் எங்களின் வாழ்க்கயில் இருக்கும் வீணான எண்ணங்கள், வீணான பகைகள்,குரோதங்கள் , விரோதங்கள், இவைகளை விட்டும் நன்மக்களாக எம்மை மாற்றுவாயாக.!
 
 என்னருமைச் சகோதரர்களே....
என் அருமைச் சகோதரர்களே..!
இன்று உலக அளவில் மனிதன் தன்னை அறிந்தும் அறியாமலும் பாவக்கரைகளில் மூழ்கி இருக்கின்றான்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதன் அநியாயங்களும் ,அட்டூழியங்களும், அடாவடித்தனங்களும், செய்து அவைகளைப் பொருட் படுத்தாமல் தன் மனோ இச்சைப்படி நடந்து கொள்கின்றான்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதன் இன்றைக்கு கண்ணை மூடினாலும் பாவங்கள் ,கண்ணைத் திறந்தாலும் பாவங்கள். பாவம் ,தீமை என்ற பெயரை எத்துணை பேர்கள் இன்று இலாபகரமாக நாம் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனின் கைகளால் தீமைகளை விலை கொடுத்தும், கொடுக்காமலும் நாளா பக்கங்களிலும் வாங்கிக்கொண்டு அவைகளை மூட்டை மூட்டைகளாக கட்டி வைத்திருக்கின்றான்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனுக்காக அல்லாஹ் எத்துணை அருட்கொடைகளை வழங்கி மனிதா! நீ இதனை இப்படித்தான் புசிக்க வேண்டும் என்று சொல்லுயும் ..அவைகளை மனிதன் உதாசீணம் செய்கின்றான்.

என் அருமைச் சகோதர்ரகளே..!
மனிதனுக்காக அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக்கி ஹலால் ,ஹராத்தைப் பிரித்துக்காட்டி அவைகளை முறைப்படி செய்யுங்கள் என்று கட்டளை இட்டும் அவைகளுக்கு செவி சாய்க்காமல் விளையும் பயிர்களைப்போன்று எத்துணை மனித சமூகம் வாழ்கின்றது.

என் அருமைச் சகோதர்ரகே..!
இன்றைக்கு இருட்டில் எத்தனை வாலிப்கள் முதல் வயோதிபர்கள் வரை விபச்சாரத்தில் மயங்குகின்றார்கள். யா அல்லாஹ்.

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனாகப்பிறந்தவன் கொடூரமான வட்டித் தொழிலையும்,கொடுப்பது, எடுப்பது , எழுதுவது, சாட்சி சொல்வது, உண்பது ,குடிப்பது என்று வட்டியில் மூழ்கிக்கிடக்கும் சமூகங்கள் தான் எத்துணை.?

என் அருமைச் சகோதரர்களே..!
மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மேலானதும், தன் கவனம் அங்குதான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட நமது மனைவி ,மக்கள் விஷையத்தில் எத்துணை சமூகம் அக்கரை காட்டுகின்றார்கல்.

என் அருமைச் சகோதரர்களே..!
முஸ்லீம்களுக்கு அழிவுகளும்,நெருக்கடிகளும், அடிக்கடி வரக்காரணம் என்ன? யாராவது தன் மனதைத் தொட்டுக்கேட்டதுண்டா.

என்னருமைச் சகோதர்ரகளே..!
இத்துணைக்கும் காரணம் நாம் செய்யும் தீமைகள் , இந்தத்தீமைகலால் அல்லாஹ்வுடைய சோதனை உலகில் எந்தப்பரப்பிலும் ஏற்படலாம்,
அது சுனாமியாக இருக்கட்டும், மழையாக இருக்கட்டும்,வெயிலாக இருக்கட்டும் ,புயலாக இருக்கட்டும், மக்களுக்கு மக்களுக்குளே பிரச்சனைகலாக இருக்கட்டும் எதுவானாலும் உலகில் நடை பெருகின்ற தீமைகளே காரணம்.

என் அருமைச் சகோதரர்களே..!
இதைச் சொல்லுகின்ற நானும் தான் என் காதில் கேட்கும் படி சொல்லுகின்றேன். தீமைகளைத் தவிர்ப்போம், தக்வாவைக் கடைப்பிடிப்போம், ஜங்காலத்தொழுகைகளை முறைப்படி தொழுது பிர மக்களையும் நல்வழியில் கொண்டு வருவோம்.

என் அருமைச் சகோதர்ரகளே..!
நேற்று என்பது.. மாஷா அல்லாஹ் முடிந்து விட்டது.
இன்று என்பது.. ஸூப்ஹானல்லாஹ் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
நாளை என்பது.. இன்ஷா அல்லாஹ் வர இருக்கின்றது. இந்த நாளை என்ற பொழுதில் யார் இருப்போம் யார் இருக்க மாட்டோம் என்று என்னாலும்,உங்களாலும் சொல்ல முடியாது, அதனால் நமக்கு தரப்பட்ட கால நேரங்களை நல்லமல்களில் அதிகம் செலவலிப்போம்.
நமது பேச்சுக்கல், நடத்தைகள், எல்லாவற்றையும் பிரயோசனமான முறையில் கொண்டு செல்ல அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக .

என்னருமைச் சகோதரர்களே..!
இன்றைக்கு பலஸ்தீனம் படுகின்ற துண்பங்கள்,துயரங்கள்,கொடுமைகள் யா அல்லாஹ் சொல்லி முடிக்க முடியாத அளவுக்கு அநியாயமாக கொலை செய்யப்படுகின்ற காட்சிகள் நம் எல்லோருடைய கண்களுக்கும் தென்படுகின்றது.
என்னருமைச் சகோதரர்களே..
கொஞ்சம் நாமெல்லாம் கவலைப்படுவோம், தனிமையில் இருந்து பிறந்தது முதல் இன்று வரைக்கும் நான் என்ன் செய்தேன், நாளை என்ன செய்யப்போகின்றேன் என்று ஜிந்திப்போம்.

என்னருமைச் சகோதரர்களே..
இதைச் சொல்லுகின்ற நானும், இதை வாசிக்கின்ற நீங்களும் நேற்று அப்படி அப்படியெல்லாம் இருந்தோம். இந்த நிமிடம் நாமெல்லாம் ஒரு கோட்டின் கீழ் செல்வோம். குர்ஆனை ஓதுகின்றவர்கள் ஓதுங்கள். நோன்பு நோற்பவர்கள் நோற்றுக்கொள்ளுங்கள் நமது பூமி நமக்கு வேண்டும், நம் முஸ்லீம்கள் நிம்மதி அடைய வேண்டும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் . அல்லாஹ் நம் அனைவருக்கும் "ஹிதாயத்" என்னும் நேர்வழியைக் காட்டுவாநாக ஆமீன்.
 
 பிரிவுகளும்,பிளவுகளும்.
அல்லாஹ்வின் கட்டளைகளோடு இணைதலே இஸ்லாத்தோடு உறுதியாக இருப்பதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுதல் இஸ்லாத்தை விட்டு பிரிவதாகும். இதை உலக அளவில் முஸ்லிம்கள் மிகப் பெரும்பாலோர் சரியாக உணரவில்லை. அதனால் தான் இணைதல், பிரிதல் என்பதன் தவறான பொருள் விளக்கத்தில் உலக முஸ்லிம்கள் விட்டில்களாய் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கின்றனர்.
பிரிவுகள் பெயரால் மார்க்க மோசடிகள்,
பிரிவுகள் பெயரால் மார்க்க மீறல்கள்
பிரிவுகள் பெயரால் மாபாதகங்கள்
பிரிவுகள் பெயரால் வழிகேடுகள்….
பிரிவுகள் பெயரால் முஸ்லிம்களுக்குள் மோதல்கள், பொருள் இழப்புக்கள், உயிர் சேதங்கள்,
பிரிவுகள் பெயரால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் அளவிட இயலாது சொல்லியும் மாளாது எழுத்திலும் வடிக்க முடியாது. எனினும் பிரிவுகள் துவங்கியதிலிருந்து இன்றளவும் பிரிவின் பிடியிலிருந்து எந்த மனிதனும், குறிப்பாய் எந்த முஸ்லிமும் விடுபட்டதாய் தெரியவில்லை.


பிரிவுகளின் நிரந்தர முற்றுப்புள்ளி இஸ்லாம்.
இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் மானுட ஒற்றுமை.
முஸ்லிம்கள் மட்டுமின்றி மானுடத்தை ஒன்றிணைக்கும் இறையருளிய வாழ்க்கை நெறி, வாழும் நெறியே இஸ்லாம்.
இதை இன்றளவும் முஸ்லிம்கள் சரியாக உணரவும் இல்லை. முஸ்லிம்களுக்கு உணர்த்தப்படவும் இல்லை. பிரிவுகளின் விபரீத விளைவுகளையும், கேடுகளையும் மற்ற மனிதர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மிக்கோரே முஸ்லிம்கள் –

அல்லாஹ்வின் கட்டளைகளோடு உறுதியாக இருப்பதுவே இஸ்லாமிய ஒற்றுமை. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுதல்-இஸ்லாத்தை விட்டுப் பிரிவதாகும்.இதுதான் அல்குர்ஆன் ஒற்றுமைக்குத் தரும் வரைவிலக்கணம். இவ்வரைவிலக்கணத்துக்கு நபியவர்கள் வாழ்வியல் வடிவமானார்கள். நபியவர்களைத் தொடர்ந்த நபி தோழர்களும் இஸ்லாமிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானவர்கள். நபி காலத்தில் நிலவியதே உண்மை இஸ்லாமிய ஒற்றுமை. இதையே நாம் ஆய்வின் பொதுத் தலைப்பாக்கியுள்ளோம். நபிகால இஸ்லாமிய ஒற்றுமை. இஸ்லாமிய ஒற்றுமையியல் என்பதும் இதுதான்.


அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னி டம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின் றான். அல்குர்ஆன்: 42:13.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.