Followers

Wednesday, December 5, 2012

பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..அதில் புறிந்தது என்ன.?

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
பெரியவர்களே.! சிறியவர்களே.! சகோதரர்களே.! சகோதரிகளே.!
அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக.!

பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..அதில் புறிந்தது என்ன.?

நாட்கள் என்று சொல்லும் போது அந்த நாட்கள் நம்மைக் கடந்து செல்கின்றது. கடக்க வேண்டிய மனிதன் கடக்கின்றான். கடப்பதற்கும்,நடப்பதற்கும் முடியாத மனிதன் ஓய்வெடுக்கின்றான்.இதை மனிதன் தன்னளவில் செயல் படுத்தும் ஒரு காரியம்.
நேரம் என்று சொல்லும் போது அதை நம்மால் பார்க்கத்தான் முடியும் அதன் மூன்று முள்ளுகளும் ஒன்றை விட்டு ஒன்று மாறுவதனால் நேரம் என்ற ஒன்று இயந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதற்கு ஓய்வு கிடையாது. என் வீட்டில் கடிகாரம் இயங்கவில்லை என்றால் அதை இயற்கும் உயிர் மின்கலம் அதாவது bettary இது ஏதாவது சக்தி இழந்தால் என் வீட்டில் கடிகாரம் இயங்காது.இறைவன் நியதி சூரியன் இயங்குவதனால் நேரம் என்ற சொல் நகர்ந்து செல்கின்றது.

இந்த இரண்டுக்குமிடையில் மனிதன் என்ற பெயர் சூட்டப்பட்டவன் அவனை அல்லாஹ் அல்குர்ஆனில் வர்ணிக்கும் போது இப்படிச் சொல்லுகின்றான்.

"நிச்சயமாக நாம் மனிதனை அழகான அமைப்பில் படைத்தோம்."(95:4)
"பின்னர் தாழ்ந்தவர்களில் மிகத் தாழ்ந்தவனாக அவனை நாம் ஆக்கினோம்"(95:5)

இந்த இரு வசனமும் மனிதனின் இரண்டு தன்மைகளை வெளிக்காட்டி சொல்லுகின்றது 1- அவன் அழகானவன் 2- அவன் தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவன்.
இந்த இரண்டு தன்மைகளைக் கொண்டும் மனிதன் மேலே சொல்லப்பட்ட கடந்து செல்லும் நாட்களையும், பார்க்கத்தான் முடிந்த நேரத்தையும் ஒப்பிட்டால் மனிதன் தினமும் என்ன செய்கிறான்,எதைச் சிந்திக்கின்றான் என்ற கேள்விக்கு பதிலே அல்லாஹ் அல்குர்ஆனில் சொன்ன அழகானவன்,தாழ்ந்தவன் என்றதைப் புறிந்து கொள்ளலாம்.


மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெறும் அருட்கொடைதான் இரண்டு கண்களும் இந்தக் கண்கள் எட்டிய தூரத்தை பார்க்கின்றது. இதே கண்ணால் நன்மைகளை சேமிக்கவும் முடியும்,இதே கண்ணால் ஸூப்ஹானல்லாஹ் அல்லாஹ் தடுத்த தீமைகளையும் சேமிக்கலாம். இதுதான் மேலே சொல்லப்பட்ட தலைப்பு பார்க்கின்றோம் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்..ஆனால் புரிந்தது என்ன. ? இதற்கான பதிலை இது வரைக்கும் எவரும் மட்டிட்டுப் பார்க்கவில்லை என்று சொன்னால் அது இந்த இடத்தில் மிகையாகாது காரணம் அப்படியான பார்வைகள் இன்று நோக்கப்படுகின்றது. மறுமை என்னும் அந்த வாழ்வில் கேள்வி கணக்கு கேட்க்கப்படும் போது அல்லாஹ் மனிதனின் நாவுக்கும் பூட்டு போட்டு விடுவான். பேசமுடியாது ஆனால் மனிதனின் ஒவ்வொரு உருப்புகளும் சாட்சி சொல்லும் கண்,காது,கை,கால்,மறுமஸ்தானம் எல்லா உறுப்புகளும் பதில் சொல்லும். அப்போது நாம் என்ன செய்யப்போகின்றோம். நமது உடம்பின் ஒரு சிறு காயம் ஏற்பட்டால்,வலிஒன்று ஏற்பட்டால் ஏன் நமது கண்கள் கலங்குகின்றது கண்ணீர் வடிக்கிறது, இது மனிதனின் உறுப்புகள் ஓற்றுமையாக இருப்பதை நாம் உணர்கின்றோம். அப்படி ஒற்றுமையாக இருக்கும் நமது உறுப்புகள் நாளை மறுமையில் நமக்கெதிரா அல்லாஹ்விடம் சாட்சி சொல்லும் என்றால் உலகத்தில் நாம் எதைப் பார்க்கின்றோம், பார்த்தவைகளை எப்படிப் புரிகின்றோம். என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா.?

மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,


அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


மேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,


பாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,

இறைவன் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து சென்று போன காலங்கள் ஏதோ.......என்றும் இன்ஷா அல்லாஹ் வரப்போகும் அடுத்த நிமிடம் அதை உன்னதமான முறையிலும் கழிக்க வேண்டும்.

"அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்". (அல் குர்ஆன் 3:83)
"இன்னும் இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்." (அல் குர்ஆன் 3:85)
"நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்."(அல் குர்ஆன் 3:19)

இவ்வுலக வாழ்கையின் நோக்கத்தை புரிந்து கொண்டு, உண்மையான இலக்கை நோக்கி பயணிப்போர் அனைவருக்காகவும்,

இறைவனால் வழங்கப் பட்ட புத்திநுட்பத்தை செயல்படுத்தி இறைவனை புரிந்துக் கொண்டோர் அனைவருக்காகவும்,


இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனின் அருளை காண விரும்புவோர் அனைவருக்காகவும்,


இறைவனின் வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன் படி நடக்க விரும்புவோர் அனைவருக்காகவும்,


இறைவன் அருளியுள்ள அருட்கொடைகளைப் புரிந்து கொண்டு அதற்கான நன்றி உணர்வையும், இறை நேசத்தையும் உள்ளத்தில் கொள்வோருக்காகவும்,


படைத்து பரிபாளிக்கும் இறைவனுக்கு தனது செயற்பாடுகள் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய விரும்புவோர் அனைவருக்காகவும்,

இறைவேதங்கள், இறை தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டோருக்காகவும்,

வாழ்க்கைப் படலத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர் கொண்டு தீர்வுத் திட்டத்தை தேடுவோருக்காகவும்,


நான், நீங்கள் உட்பட ஈருலகிலும் நிம்மதியான வாழ்வையும், இறைவன் சித்தப் படுத்தி வைத்துள்ள பேரின்பங்களையும் அடைய விரும்புவோர் அனைவருக்காகவும்,

நம் செயல்களை தூய வடிவில் அமைத்துக்கொள்வோம்.


"ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (அல்குர்ஆன். 22:34)
"ஆணாயினும், பெண்ணாயினும் இறை நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்." (அல் குர்ஆன் 16:97)

ஒருமுஸ்லிம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.
ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசவோ, மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராயவோ, மானப்பங்கப் படுத்தவோ கூடாது.
ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.
ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.
அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இழக்காதவனாகவும் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் தன செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.
ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், கருணையுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரையும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.


மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். (நூல் திர்மிதி)

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும். ( நூல்: திர்மிதி)


அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(அல்குர்ஆன். 4:79)"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை, பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (51)
மனிதன் எதையெல்லாம் பார்க்கின்றானோ அந்தப்பார்வை நன்மையானதாக அமைய வேண்டும் ஈமானின் கிளைகளில் கடேசி நிலைதான் மனிதனுக்கு இடையூரு தரும் பொருளை அகற்றுவது. இந்த நிலை கூட மனிதன் தன்னிடத்தில் சர்வசாதாரணமாக தன்நிலையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காம­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

எனவே அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள எத்தனையோ அருட்கொடைகளை நாம் புசிக்கின்றோம், அந்த அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவர்களாகவும் ,அவனின் கடமைகளை முறையாக நிறை வேற்றும் நன்மக்கலாகவும் அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.ஆமீன்.
_________________________________________________________________________________
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
 

No comments:

Post a Comment