Followers

Wednesday, December 5, 2012

நரகில் உள்ள வேதனைகள்...

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.
ஒற்றுமை என்றொரு கயிறு ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு
கற்றவர் கல்லாதோர் முயன்று மற்றவர் இணைந்தால் உயர்வு

மார்க்கத்தில் ஆய்வு கொள் அறிவு பெற்று இறைவனைத் தேடு!
நாம் உரிய காலத்தில் உரியவைகளை இறைக் கட்டளைப்படியும், நபிகளாரின் சொல் - செயல்படியும் ஆற்றி மறுவுலக நல் வாழ்வினைப் பெறுவோம்.

நரகில் உள்ள வேதனைகள்...
******************************
****************************
நரக நெருப்பையும் - அதன் வேதனையையும் பற்றி கடினமாக எச்சரிக்கை செய்கின்றது. நரகத்தின் அகோரமும், அதன் தீப்பிழம்புகளும் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணங்கள் சிறிய அளவில் பூமியி்ன் சிற்சில பகுதிகளில் அவ்வப்போது தெரியத்தான் செய்கின்றன. நல்லுணர்வு பெறும் உள்ளங்களுக்கு இந்த அடையாளங்கள் மகத்தானதாகும்.
மனிதன் என்ன செய்ய வேண்டும்?
1. ஒருவனுடைய நம்பிக்கையை பொறுத்தே அவனுடைய செயல்கள் தொடர்சியாய் அமைகின்றது.
2. அவன் நம்பிக்கையை மேம்படுத்தினால் அதனால் அவன் மேம்படுகிறான்.
3. அவன் தவறான நம்பிக்கை அவனை வழிக்கேட்டில் விட்டுவிடுகின்றது.
4. எனவே நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை அவனை இம்மையிலும்,மறுமையிலும் நன்மையை நோக்கி நடைபோட செய்யும்.
5. இந்த உலகின் நியதி என்னவென்றால் விடாமுயற்சி வெற்றியை தரும் என்பது ஆகும், தீயை தொட்டால் சுடும் என்பதுபோல்.


எல்லாம் பிரித்தறியக்கூடிய ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியிருக்கின்றான். இதன் அடிப்படையில் நரகத்தின் வேதனைகள் அதன் கொடூர தன்மைகள் மனிதன் செய்த பாவங்களுக்கு ஏற்ப தண்டனைகள் நரகத்தில் வழங்கப்படும். பாவம் செய்யும் மனிதனுக்கு அல்லாஹ் சந்தர்ப்பங்களை அள்ளி வழங்கியிருக்கின்றான், ஆனால் மனிதன் அவைகளைப் பொருட் படுத்தாது ஏனோ என்ற கேள்வியை மூட்டையாகக் கட்டி வைத்துள்ளான். இந்த அடிப்படையில் நரகத்தின் வேதனை என்ற தலைப்புகளை கீழே உற்று நோக்களாம்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
“மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” ஆதாரம் : திர்மிதி.

“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)” (குர்ஆன் 40:46)
எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு "எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (குர்ஆன் 32:20)

நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரிக்கவும் மாட்டான். வாழவும் மாட்டான். (குர்ஆன் 20:74)


நெருப்பு:
                                                                   
~~~~~~~

மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (குர்ஆன் 2:24)

(ஓரிரைக் கொள்கையில் நம்பிக்கையற்று வாழும்) அவர்களுக்கு நரகத்தில் விரிப்புகளும், அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.(குர்ஆன் 7:41


'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர். அபூ ஹுரைரா(ரலி)
(நூல்: புகாரி . 3265)


விலங்கிடப்படுதல்:                             
                       
 ~~~~~~~~~~~~~~~~
அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.
(குர்ஆன் 40:71,72)

நெருப்பால் ஆன ஆடை:            

 ~~~~~~~~~~~~~~~~~~~

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.
(குர்ஆன் 22:19,20)


கொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்: 

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

‘அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்!’ பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!(என வானவர்களிடம் கூறப்படும்.)
(குர்ஆன் 44:47,48)

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

(குர்ஆன் 22:19,20)


வெப்பம்:                                   
     
 ~~~~~~~

அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.
(குர்ஆன் 56:42-44)

அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். ‘கோடையில் புறப்படாதீர்கள்!’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது’ என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
(குர்ஆன் 9:81)

அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.

(குர்ஆன் 78:24,25)


குளிர்ச்சி கிடையாது:  
         
 
வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
(குர்ஆன் 78:21-24)

சூடு போடப்படும்:
~~~~~~~~~~~~~~

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!’ (என்று கூறப்படும்)
(குர்ஆன் 9:35)


உள்ளத்தை தாக்கும் நெருப்பு:


ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
(குர்ஆன் 104:5-9)

புரட்டிப் போடப்படுவார்கள்:

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள்.
(குர்ஆன் 33:66)

மேலும் கீழும் வேதனை:

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!’ என்று (இறைவன்) கூறுவான்.
(குர்ஆன் 29:55)


கருகும் தோல்கள்:
     
 நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறுதோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
(குர்ஆன் 4:56)

அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள்.

(குர்ஆன் 23:104)


சம்மட்டி அடி:
                

அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.
(குர்ஆன் 22:21)


கூச்சலும் அலறலும்:
    

கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.
(குர்ஆன் 11:106)


 வேதனை குறையாது:     
அவர்களை விட்டும் (தண்டணை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.
(குர்ஆன் 43:75)


குறைந்த பட்ச தண்டணை:


“ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)
(நூல் : முஸ்லிம் 311)


சொர்க்கம் செல்வதற்கும் நரகத்தில் இருந்து விடுதலை அடைவதற்கும் இந்த உலக வாழ்க்கை ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது. ஏனெனில் இறை நிராகரிப்பாளராக ஒருவர் மரணித்து விட்டால் மறுபடியும் இந்த உலகத்துக்கு வந்து நம்பிக்கையாளராக மாறுவதற்கு சந்தர்ப்பம் கண்டிப்பாக கிடைகாது. மறுமை நாளில் இறை நிராகரிப்பாளர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று திருமறையில் இறைவன் குறிப்பிடுகிறான்.

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், ‘எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம் நாங்கள் முஃமின்களாக இருப்போம்’ எனக் கூறுவதைக் காண்பீர். (அல்-குர்ஆன் 6:27)

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!”

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.

**********************************************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

No comments:

Post a Comment