Followers

Monday, November 19, 2012

சோதனைகள்....... இயற்கை அனர்த்தம் என்றா? அல்லாஹ்வின் சோதனைகள் என்றா?

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

சோதனைகள்.......
இயற்கை அனர்த்தம் என்றா?
அல்லாஹ்வின் சோதனைகள் என்றா?


நிச்சயமாக அல்லாஹ்வின் சோதனைகள் என்றே இறை விசுவாசிகள் நம்ப வேண்டும். அல்லாஹ்வின் சோதனைகள் இரு வகைப்படும் என்பதை அல்குர்ஆனின்னூடாக அறிகிறோம்.
முதலாவது

மக்கள் பாவங்களிலும் அட்டூழியங்களிலும் அக்கிர மங்களிலும் மூழ்கும்போது அல்லாஹ் சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க விரும்புகிறான். இந்தத் தண்டனை பாவங்களில் புரன்டு வாழ்பவர்களை திருத்துவதற்கும் மக்களுக்கு படிப்பினைக்குரியதுமாக ஆக்குகிறான்.
இரண்டாவது

மக்களின் ஈமானை பரீட் சிப்பதற்கும் பலப்படுத்துவதற்குமுரிய சோதனையாக ஆக்குகிறான்.
முதலாவது சோதனைகளை பொறுத்த வரை, மக்கள் பாவங்களிலும் இறை நிராகரிப்பிலும் மூழ்கும்போது ஏற்படுகின்றது. 
“எந்த ஒரு கிராமத்திற்கு நாம் நபியை அனுப்பினாலும் அதிலுள்ளவர்கள் அடிபணியும் பொருட்டு அவர்களை வறுமையாலும் துன்பத்தாலும் நாம் பிடிக்காது விட்ட தில்லை.” (7:94)

பின்னர் கெட்டதின் இடத்திற்கு நல்லதை நாம் மாற்றினோம். அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகியபோது “எங்கள் மூதாதையர்களுக்கும் துன்பமும், இன்பமும் ஏற் பட்டன என (தண்டனையை மறந்து) கூறினர். எனவே அவர்கள் உணராத விதத்தில் திடீரென நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.” (7:95)


அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து இறை விசுவாசத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்ற அடிப்படைச் செய்தி இந்த உம்மத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அச்செய்திக்கேற்ப அவர்கள் வாழாதபோது தண்ட னைகள் பல வழிகளிலும் வந்து சேரும். இத்தண்டனையிலிருந்து படிப்பினை பெற்று திருந்தி வாழ்வதற்காகவும் இன்பங்களை அனுபவித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாழ்வதற்காகவும் சந்தர்ப்பங்கள்; வழங்கப்படுகிறன. அதிலிருந்து படிப்பினை பெற் றாக வேண்டும். இல்லையேல் திடீரென சோதனைகளும் தண்டனைகளும் நினைத்துப் பார்க்க முடியாதளவு வந்து சேரும் என்பதை அல்லாஹ் விளக்கப்படுத்துகிறான்.

மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு, பூகம்பம், மண்சரிவு என்று பல சோதனைகளை ஏற்கனவே அனுபவித்து விட்டு நிம்மதியை உணர்ந்தார்கள் மக்கள். ஆனால் சோதனைகளால் ஏற்பட்ட இழப்புகளையும் வேதனைகளையும் நாளடைவில் மறந்து விட்டு மறுபடியும் பாவங்களில் மூழ்கிவிடுகிறார்கள். சுனாமி என்கிற பயங்கரமான கடல் கொந்தளிப்பை கண்ணால் கண்டு பல அழிவுகளை நேரில் பார்த்து சொந்த பந்தங் களையும் சொத்துப் பத்துக்களையும் இழந்து விட்டு துயரத்திற்குள்ளான மக்களுக்கு, அமைதியாகவும் மன நிம்மதியுடனும் வாழும் சூழலை அல்லாஹ் ஏற்படுத்தினான்.


தண்டனைகளை “கதபாத்திரங்களாக”சித்தரிக்கப்ப
டுவதற்கு அல்லாஹ் தருவதில்லை. மாறாக நடந்து முடிந்த சோதனைகளிலிருந்து படிப்பினை பெற்று பாவங்கள் மற்றும் இறை நிராகரிப்பிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழவே தருகிறான். எப்போது அல்லாஹ்வின் சோதனைகள் வெறும் கதைகளாக்கப்பட்டு இன்பத்தில் மூழ்கிவிடும் நிலை ஏற்படுகிறதோ அப்போது அம்மக்கள் உணராத விதத்தில் தண்டனை களை அல்லாஹ் அனுப்பி விடுகிறான்.
எனவே, மழை, வெள்ளம், மண்சரிவு, கடும் வறட்சி என்பனவெல்லாம் இயற்கையின் சீற்றம் என ஒரு முஸ்லிம் ஒருபோதும் நம்ப மாட்டான். அதற்கடுத்ததாக இன்னுமொரு செய்தியை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். “நிச்சயமாக இக்கிராமங்களில் உள்ளவர்கள் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் அவர்களுக்கு வானம் மற்றும் பூமியிலிருந்து (பரகத்துகளை) பாக்கியங்களை திறந்து விடுவோம்…. (7:96)
அல்லாஹ்வை முழுமையாக விசுவாசம் கொண்டு தக்வாவுடன் வாழும்போது வானம், பூமியின் பரகத்துடைய வாசல்கள் திறந்து விடப்பட்டு பாக்கியங்களுடன் வாழும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் என உறுதியளிக்கிறான். அல்லாஹ்வின் வாக்குறுதி ஒருபோதும் பொய்யாகு வதில்லை.
அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றி கெட்ட தனமாக நடந்து பாவங்களில் மூழ்கி விடும்போது தண்டனைகள் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருந்த ஒரு கிராமத்தை அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அக்கிராமத்திற்கான ஆகாரம் எல்லா இடங்களிலிருந்தும் தாரா ளமாக அதனிடம் வந்து கொண்டிருந்தது. பின்னர் அது அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்தது. எனவே அக்கிராமத்தவர்கள் செய்துகொண்டிருந்தவற்றின் காரணமாக அல்லாஹ் பசி மற்றும் பயம் எனும் ஆடையைச் சுவைக்கச் செய்தான். (16:112)

அல்லாஹ் கூறும் உதாரணம் மிகவும் படிப்பினைக்குரியதாகும். அல்லாஹ்வின் எல்லா வகையான இன்பங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். யாரிட மிருந்து எந்த அச்சுறுத்தல்களும் இன்றி பசி பட்டினியின்றி செல்வங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ் வழங்கிய இந்த நிஃமத்களுக்கு நன்றி கூறி அவனுக்கு முற்றிலும் அடிபணியாது வாழும்போது அல்லாஹ் அவர்களை சோதித்து விடுகிறான்.

இன்பத்தையும் சொகுசு வாழ்க்கையையும் கண்டு பழகியவர்களுக்கு வறுமையும் பயத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தி விடுகிறான். இது சாதாரண சோதனையல்ல. இந்த சோதனை அவர்களை எல்லா வழிகளிலும் அச்சுறுத்தல் தரக்கூடியதாக இருக்கும். பசி, பட்டினி மற்றும் வறுமைக்கு வழிகாண முடியாத பயத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது. உடல் அங்கங்களை மறைக்க ஆடை அணிவதுபோல் வறுமையும் பயமும் ஆடையாக மாறுகின்ற நிலை மாறிவிடுகிறது. எந்த நேரத்தில் எந்த ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் நாளா பக்கமும் சூழ்கின்ற அவல நிலைக்கு மாறிவிடுகிறது. “இத்தண்டனையை சுவைத்துப் பார்க்கவே” அல்லாஹ் ஏற்படுத்துவதாக எச்சரிக்கிறான். உணவை சுவைத்துப் பார்ப்பது போல் அல்லாஹ்வின் தண்டனை மனிதனால் சுவைக்க முடியாது. அவ்வளவு பயங்கரமானதாக அது இருக்கும். எனவே பாவங்களை விட்டும் ஒதுங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி நன்மையின் பால் விரைகின்ற போதே அருள்மழை கிடைக்கிறது.


காற்று, மழை போன்றவற்றினால் ஏற்படும் சோதனைகளைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடக் கூடியவர்களாக இருந் தார்கள் என்பதை ஹதீஸ்களில் படிக்கிறோம். மழை பெய்யுமாறு துஆ கேட்கும்போது “யா அல்லாஹ்! பலனுள்ள மழையை தா! தீங்கை ஏற்படுத்தக் கூடியதாக மழையைத் தந்துவிடாதே” என பிரார்த்திப்பார்கள்


இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (20:131)

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். ( 29:2,3)


ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 2319)

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு (நூல்: திர்மிதீ 2323)


எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். ( 2:286)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல்: முஸ்லிம் 5030)

"ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் (அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை " என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5023)


ஒவ்வொரு மனிதனும் நன்மையும், நலவும், செல்வமும், செழிப்பும் ஏற்படும்போது மகிழ்வு கொள்கிறான். துன்பமும் கஷ்டமும் சூழ்ந்து கொள்ளும்போது ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்கின்றான். எந்நிலையிலும் அல்லாஹ்வை நினைப்போர் மிகக் குறைவே. அதுவும் இக்காலத்தில் இலட்சத்தில் ஒருவர் என்று கூட சொல்ல முடியாத நிலை.
ஆயினும் (இறைவன்) அவனை சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்து விட்டால், என்னிறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான்’ என்று (குறை) கூறுகின்றான்.’’ –  (89 : 15, 16)
* நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகர மக்களின் கல்லடி, சொல்லடியை ஏற்றும் அவர்களை அழிக்க நாடவில்லை. இச்சோதனையை ஏற்றுக் கொண்ட காரணத்தால் இன்று அந்நகரமே இஸ்மாமிய நகரமாகத் திகழ்கின்றது. இந்த வெற்றி எதனால் ஏற்பட்டது ?

*  நபி ஹள்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் தவப்புதல்வர், அருமை மகனை அறுக்க வேண்டும்’ என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அறுக்க எத்தனித்த போது தான் அல்லாஹ், அவர்களின் முழு ஈமானையும், தன் மீதுள்ள அதீத அன்பையும் தெரிந்து கொண்டான். பின்பு தான் ‘கலீலுல்லாஹ்’ என்ற பட்டத்தை வழங்கினான். சோதனையை ஏற்றதால் தானே இப்பட்டத்தைப் பெற முடிந்தது ?


* ஹள்ரத் பிலால் (ரளி) அவர்கள் தன் எஜமானனின் அடி, உதை தாங்க முடியாமல் ஈமானை விட்டிருந்தால் “ரளியல்லாஹு அன்ஹு” என்று போற்றப்படுவார்களா? பல சோதனைகளை ஈமானுக்காக அல்லாஹ்விற்காக ஏற்றுக் கொண்டதால் தான் இன்று அவர்களின் பெயரை பலர் பெருமையாக சூட்டிக் கொள்வதைக் காண்கின்றோம். இச்சிறப்பு எப்படி கிடைத்தது ?


* ஹள்ரத் சுமையா (ரளி) அவர்கள், இறைவனுக்காக ஈமானைக் காத்திட்டபோது அவர் தம் பிறப்புறுப்பில் அம்பெய்தப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். இறைவனுக்காக தன் இன்னுயிரை ஈந்த காரணத்தால் அவர்கள் சரித்திர ஏடுகளில் போற்றப்படுகின்றார்கள்; புகழப்படுகின்றார்கள்.


* மூமீன்களின் அன்னை ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் போருக்குச் சென்று வரும்போது சிறு தடங்கலால் தங்கி விட்டு பின்னால் வந்த ஸஃப்வான் (ரளி) அவர்களுடன் ஊருக்குத் திரும்பும்போது அவதூறு கூறப்பட்டு பரிதவித்தார்கள். உண்ணவில்லை, உறங்கவில்லை, நிம்மதியிழந்து தவித்தார்கள். தம் ஆருயிர்க் கணவர் நபி (ஸல்) அவர்கள் கூட நம்முடன் பேச மறுத்து விட்டார்களே ! என புழுவாய்த் துடித்தார்கள். இவ்வளவு சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு படைத்த இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டார்கள். எனவே அல்லாஹ் அவர்களை தூய்மைப்படுத்தும் வண்ணம் ‘சூரத்துன்நூர்’ எனும் அத்தியாயத்தில் பத்து வசனங்களைக் கூறினான். இதைக் கண்டு நம் அன்னை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.


மறுமை நாளின் அடையாளங்கள்.
1- நடந்து முடிந்தவைகள்.
2- நடந்து கொண்டிருப்பவைகள்.
3- நடக்க இருப்பவைகள்.


1400 ஆண்டுகளுக்கும் முன்பே இவை நடக்கும் என்று சிலவற்றைச் சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் கூறிச்சென்ற அடையாளங்களில் பல நடந்து முடிந்து விட்டன.

நடந்தது போக இனியும் நடக்கும் என அவர்கள் கூறியுள்ள சில அடையாளங்கள் நிச்சயம் நடந்தே தீரும். இதில் சந்தேகமே இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறமை நாள் வந்து விடும்.


மறுமை நாளில் நல்லவன், தீயவன் யார்? யார்? என இறைவன் விளக்கி, சொர்க்கம், நரகம் யாருக்கு எனத் தீர்ப்பு வழங்குவான். அதுவே நிரந்தர வாழ்வும் கூட.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக்
காட்டி 'நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்''
எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூல்: புகாரி 4936, 5301, 6503


அந்த நாள் மிகவும் சமீபத்தில் வந்து விடும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னர்
அல்லாஹ் அறிவித்த பின் இன்னும் அந்த நாள் வரவில்லையே என்ற சந்தேகம் சிலருக்கு
ஏற்படலாம்.
இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்து விட்ட

இலட்சோப லட்சம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 1400 ஆண்டுகள் என்பது மிகவும் அற்பம்
தான். இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுமை நாள் வந்தாலும் 'அது சமீபத்தில் தான்
உள்ளது'' என்ற அறிவிப்புக்கு அது முரணாக அமையாது.

யாராலும் அறிய முடியாது

'அந்த நாள் எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்'' என்ற கேள்விக்கு
திருக்குர்ஆன் அளிக்கும் விடை 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது''
என்பது தான்.


'அந்த நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள்
கேட்கின்றனர்.'இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத்
தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக
அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர்
நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்ற னர். 'இது பற்றிய ஞானம்
அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறு வீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து
கொள்வதில்லை.
( 7:187)


'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?'' எனக்
கேட்கின்றனர்.'அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன்
மட்டுமே'' எனக் கூறுவீராக!
( 67:25, 26)

நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்)

தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன்'' என்று கூறுவீராக!
( 72:25)


மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).புஹாரி : 7063

நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.

அபூஹுரைரா (ரலி).புஹாரி : 7061


மேற்படி நபியவர்களின் நபிமொழியை உற்று நோக்கும் போது மறுமை நாளின் நிகழ்வுகளுக்கு முன் ஒரு கால கட்டம் வரும். உலகம் படைக்கப்பட்டது முதல் இது வரைக்கும் நடந்து முடிந்தவைகள் ஏராளம் ஏராளம்.
இப்போது உலகில் நடைபெற்றுக்கொண்டிருப்பது தினம் தோறும் நாம் கண்களால் பார்க்கின்றோம், செவிகளால் கேட்கின்றோம்.பல நாடுகளை எடுத்து நோக்கும் போது அன்று 1400 ஆண்டுகளுக்கு முன் நபியவர்கள் சொன்னது தற்பொது நடை பெருகின்றது கொலைகள் அதிகரிக்கின்றது, அற்புதமான செய்திகள் அறங்கேருகின்றது.
இன்னும் ஒரு சில விடையங்கள் நடக்க இருக்கின்றது அதுதான் ஈஸா(அலை)அவர்களின் வருகை தஜ்ஜாலின் வருகைகளும் அதனூடாக நடைபெறும் கட்டங்களுமாகும்.

இன்றைக்கு அரேபியா நாடுகள், எகிப்து, பலஸ்தீனம், லப்னான், லிபியா, இன்னும் எத்துணை நாடுகளுக்கு மத்தியில் எத்துணை கொடூரங்களும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கவை.


சூரத்துல் பீல் அல்குர்ஆனில்.அத்தியாயம்105 வசனங்கள் 1-5 வரையான இந்த சூரா பெரும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது .


நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:


நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.


அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.


அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.

இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.
இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.


காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.


சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.


அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன், 105:1-5)


இந்த வசனத்தில் கூறப்பட்ட "ஸிஜ்ஜூல்" என்ற அந்த சிறிய கல் இன்று "சவூதி அரேபியாவில்" கண்டேடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் "ஸூப்ஹானல்லாஹ்" இதுவும் மறுமை நாளின் அடையாளங்கள்.

இன்னும் இலங்கையில் சில பகுதிகளில் சிவப்பு மழை பேய்ந்தகாக தகவல்கள் "ஸூப்ஹானல்லாஹ்" இதுவும் மறுமை நாளின் அடையாளங்கள் .

இப்படி மறுமை நாளின் அடையாளங்களை நடந்து முடிந்தவைகள்.
நடந்து கொண்டிருப்பவைகள், நடக்க இருப்பவைகள் இவைகளில் இரண்டு கட்டங்களை நாம் தாண்டி விட்டோம் இன்ஷா அல்லாஹ் நடக்க இருக்கும் நிகழ்வுகள் மிக சமீபத்தில். அல்லாஹ் என்னையும் உங்களையும், உலக மாந்தர்கள் அனைவரையும் நேரான வழியில் நடப்பதற்கும், அவ்வப்போது வரும் சோதனைகள், வேதனைகளில் பொறுமையாக இருப்பதற்கும், சந்தர்ப்பங்களை சாதனைகளாக மாற்றி அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடிய மக்காளாக அல்லாஹ் நம் அனைவரையும் மாற்றியருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம், SRI LANKA.
********************************************************************************* 
 

No comments:

Post a Comment