Followers

Monday, November 5, 2012

நம்மை நாம் மாற்றுவோம்


 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

நம்மை நாம் மாற்றுவோம்
 
நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்
இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்
இன்றய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்
இன்றய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!
எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில்
புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது



இறந்த காலம்......அது சென்று விட்டது அந்த காலப்பகுதியில் ஏதோ செய்தோம்
______________________________________________
* நமது பேச்சுக்கள் மூலம்,
* நமது நடத்தைகள் மூலம்,
* நமது எண்ணங்கள் மூலம்,
* நமது நோக்கங்கள் மூலம்,

(நானும் கூட சென்ற காலங்களில் அப்படித்தான்

இன்ஷா அல்லாஹ் ,,அல்லாஹ் என் பக்கம்.)


நிகழ் காலம்......அது இப்போது நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். இக் காலப் பகுதியில் ஏதோ செய்கிறோம்.
________________________________________________
* நமது தகாத பேச்சுக்கள் மூலம்,
* நமது தகாத நடத்தைகள் மூலம்,
* நமது தகாத எண்ணங்கள் மூலம்,
* நமது தகாத நோக்கங்கள் மூலம்,

(இக்காலப் பகுதியில் நான் என்னை மாற்றிக் கொண்டேன் ... அல்லாஹ் போதுமானவன்.)


எதிர் காலம்.....அது வர இருக்கும் காலம் ..அதாவது அடுத்த நிமிடம், நாளைய தினம். இக்காலப் பகுதி எல்லோருக்கும் கேள்விக் குரியே..
இதில் என்ன செய்வோம்.

_________________________________________________
* நமது பேச்சுக்களை மாற்றுவோம் நல்லதைப் பேசுவோம்.
* நமது நடத்தைகளை மாற்றுவோம் ஒழுக்கத்தை பேணுவோம்.
* நமது எண்ணங்களை தூய இஸ்லாத்தின் எண்ணங்களாக மாற்றுவோம்.
* நமது நோக்கங்களை ஒரே நோக்கமாக ...அல்லாஹ் என்னைப் பாரக்கிறான் நான் அவனைப் பார்க்கா விட்டாலும் அவன் என்னைப் பார்க்கிறான் என்ற நோக்கத்தை செயல் படுத்துவோம்.

(இக்காலம் இன்ஷா அல்லாஹ் என் கையில் கிடைத்தால் நிச்சயம் என்னை மாற்றிக்கொள்வேன்.)

____________________________________________________
இன்ஷா அல்லாஹ் எல்லோரும் இந்த நிமிடம் நம்மை நாம் சிந்திப்போம் அடுத்த நிமிடம் நம் வாழ்க்கையில்
இவைகளை செயல் படுத்துவோம்.


இது ஒரு கருத்தரையாடல் கிடையாது காலத்தின் தேவைகள். நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் அருள் புரிய வேண்டும் நல்லதைச்செய்ய வேண்டும்.ஆமீன்.


இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இதில் கருத்து வேறு பாடு இருக்குமேயானால் அவைகளை தாரளமாக இவ்விட்டில் சொல்லலாம் பகிர்ந்து கொள்ளலாம்.


என்றும் உங்களுடன் அஹமட் யஹ்யா
— 

தொகுப்பு..அஹமட் யஹ்யா
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
_________________________________________________________________________________ 

 

No comments:

Post a Comment