பேஸ்புக்கும் நாமும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கே
எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
சாந்தியும்,சமாதானமும் சத்தியத்தின் தூதர் சன் மார்க்கத்தின் போதகர்
நபிகளார் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள் மீதும்
மற்றுமுன்டான முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக. ஆமீன்
அல்லாஹ் இவ்வுலகில் பல் கோடி ஜீவராசிகளைப்படைத்து அதிலும்
சிறந்தவனாக மனிதனைப்படைத்திருக்கிறான். இவ்வுலகில் மனிதனுக்கு
அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வளங்கி அவனை
அல்லாஹ் கண்ணிப்படுத்தியிருக்கிறான். மனிதன் அவைகளை
மறந்து தான் தோன்றிய பிரகாரம் தமது வாழ்க்கையை
அமைத்துக்கொண்டும், வெளித்தோற்றத்தில் தானும் ஒரு
மனிதன் என்ற போர்வையை போற்றியவனாக வாழ்கிறான்.
இந்த மனித சமூகம் சிந்திப்பதற்காக, செயல் படுவதற்காக
அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அதிலே 114 அத்தியாயம்
அதில் 6666 வசனங்களையும் அமைத்து மனிதனின்
அத்துனை சவால்களுக்கும் அதிலே கேள்விகள்
அதிலே அதற்கான பதில்கள் எல்லாமே அமைத்தும்
இருக்கிறான் அல்லாஹ்.. அல்ஹம்துலில்லாஹ்.
உலகம் என்ற பெயர் இனிமையானது அதில் வாழ்கின்ற மனிதன்
இனிமையானவன் . காலம் என்பது அது யாராலும் மதிக்கப்பட வேண்டியது
நவீன யுகம் என்று பேனாவை எடுத்தாலும் அதன் பேனா மை
முடியுமாளவு எழுதுகின்றோம். பேசுவதாக இருந்தாலும் பக்கத்தில்
தண்ணீர் வைத்து அதை அருந்தி விட்டும் பேசத்துவங்குகின்றோம்.
ஆனால் கவலைக்குறிய விடையம் நம் வாழ்க்கையில்,செயல்
வடிவில் அந்த விடையங்களைக் கண்பது அரிது.
அல்ஹம்துலில்லாஹ் இன்று இஸ்லாத்தை விளங்கி அதனை தூய வடிவில்
அறிந்து கொள்ள பல சாதனங்கள், பல இணையத்தளங்கள் தம் முன்
உலா வருவதை நாம் காணுகின்றோம். நேரம் பொண்ணானது அதனை
நாம் மண்ணில் போட்டு மிதிக்கின்றோம் என்றால் இவைகளுக்கும்
நாளை மறுமையில் ஒவ்வொரு முஃமீனும் பதில் சொல்லியாக
வேண்டும். அதிலே ஒன்றுதான் நாம் எதையும் செய்யலாம்,
எப்படியும் நடந்து கொள்ளலாம், அதைக்கேட்க நீ யார்
என்று முன்னும், பின்னும் அறிந்து கொள்ளாமல் இது
எனக்கு மட்டும் தானே சொந்தம் என்று சர்வ சாதாரணமாக
நாம் அமைத்துக்கொண்டிருக்கும் பேஸ்புக் ....அல்லாஹ்
நம் அனைவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
இந்த பேஸ்புக் என்ற தளத்தில் நமக்கு என்று ஒரு கண்ணியம் இருக்க
வேண்டும் அதனைப் பயன் படுத்தும் மனிதனுக்கு ஒரு உண்ணத நோக்கம்
இருக்க வேண்டும். எண்ணங்களுக்கு கூலி கொடுப்பவன் அல்லாஹ்.
எனவே நாம் எண்ணுகின்றது தான் நமக்கு மறுமைக்கு பிரயோசனம்.
நம் செயல்கள் தான் நமக்கு வெற்றிக்கு அடித்தளம். இதை உணராமல்
நம் சகோதரர்கள் ஏனோ தானோ என்று முகநூல்களை அமைத்து
எதுவும் செய்யலாம் எப்படியும் வழி நடத்தலாம் என்று அவர்கள்
எண்ணுவதை அவர்கள் போடும் தகவல்களை வைத்து மதிப்பிடலாம்.
இதை நல் வழியில் ஒரே அடிப்படையில் வழி நடத்தும்
சகோதர, சகோதரிகளுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
இன்று நம் பேஸ்புக் அங்கத்தவர்கள் தாங்களின் தொலை பேசி இலக்கங்களை
தாங்கள் சொந்த போட்டோக்களை அவர்கள் வெளிய்ட்டு தாங்கள்
அமைதியாக இருக்கின்றார்கள். குறிப்பாக நம் பெண் சமுதாயம் பாத்திமாக்
-ல் என்ற பெயரில் வந்து இப்படியான விஷையங்களை செய்து
கொண்டிருக்கின்றார்கள். பெண்களுக்கு இவைகள் முறையற்ற
தன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்குப்பின்னால் வரும் பிரச்சனைகள்
ஷைத்தானின் வழி நடத்தல்களை இவர்கள் சற்றும் உணர்வதில்லை
ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் அப்படி வாழ்ந்தால் தான்
நாளை மறுமையில் வெற்றி பெற முடியும் என்ற சிந்தநையை
மறந்து அவர்களுக்கு கொடுத்த கண்ணியம்,ஒழுக்க மாண்புகளை
ஒரு சில வினாடிக்குள் குழி தோன்டிபிபுதைத்து.
"கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்கின்றார்களே" என்றால் இதற்கு காரணம் அவர்கள் இத்தளத்தை ஏதோ நேரம் போக
வேண்டும்.சிலரை உற்றுப் பார்க்க வேண்டும், சிலரோடு இப்படிப்பேசினால்
தான்அவர்களை இவர்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று
அரட்டையடிக்கும்நோக்கத்தோடு வருகின்ற நம் சகோதர, சகோதரிகளைப் பார்க்கின்றோம்.
எனவே பேஸ்புக் என்பது நமக்கு அல்லாஹ் அளித்திருக்கும் ஒரு மிகப்பெரிய
பொக்கிஷம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். அல்ஹம்துலில்லாஹ்
இந்த பேஸ்புக் மூலம் எவ்வளவு நல்ல விஷையங்களை மக்களுக்கு
சொள்ளலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம் நட்பு என்ற ஒன்றை
அல்லாஹ்வுக்காக இணைந்து அல்லாஹ்வுக்காக பிரியலாம், அல்குர்ஆன்.
அல்ஹதீஸ் அடிப்படைகளில் நாமும் வாழ்ந்து பிரரையும் வாழ வைக்கலாம்,
நமக்கு மத்தியில் இஸ்லாம் சொன்ன சகோதரத்துத்தை அமைத்துக்
கொள்ளலாம் , அறியாத விஷையங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் ,
சந்தோகங்கள் இருந்தால் அவைகளைப் பரிமாரி தெரிந்து கொள்ளலாம்,
இஸ்லாத்தின் சட்டங்களையும், அதன் முடிவுகளையும் விளங்கிக்
கொள்ளலாம். இப்படி எத்தனையோ விஷயங்களை பேஸ்புக் மூலம்
நாம் அறிய வேண்டிய விஷையங்கள் இருக்கும் போது......
நம் சகோதர,சகோதரிகள் காட்சி தருகின்ற வடிவங்களைப் பார்த்தால்
கவலையாகத்தான் இருக்கின்றது..இஸ்லாம் நமக்குச்சொல்கின்ற ஒரு
விடையம் யார் அன்னிய மதங்களுக்கு ஒப்பாகின்றாரோ அவர் நம்மைச்
சார்ந்தவர் அல்ல என்று நபியவர்கள் நமக்கு சொல்லியிருக்கும் போது
நடிகைகளின் போடோக்களை முகநூலில் போட்டு அவைகளுக்கு கருத்தும்
வண்ணம் வண்ணமான பேச்சுக்களை நடத்துகின்றார்கள் நமது
முகம்மத்களும், பாத்திமாக்களும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
நல்லதை சொல்ல வேண்டும், நல்லதைச் செய்ய வேண்டும் .நமக்கு
மரணம் என்ற ஒரு பாணம் இருக்கின்றது அதை அருந்த வேண்டும்.
நாளை மறுமை என்ற ஒரு இடம் இருக்கின்றது அதை விளங்க வேண்டும்.
இவ்வுலகில் நமக்காக தந்திருக்கும் சட்டங்களை நமக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்.
அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு ஒரு கெடுதியை
அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது... அல்லாஹ்
யாருக்கு ஒரு கெடுதியை கொடுக்கிறானோ அல்லாஹ்வைத் தவிர வேறு
யாராலும் அவருக்கு நன்மையைக்கொடுக்க முடியாது.
நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பேஸ்புக் என்ற தளத்தில்
நமது இஸ்லாம் மதிக்கப்பட வேண்டும் தவறுகள் நிகழ்வது வழக்கம்
அல்லாஹ் மனிதனை தவறுக்கும்,மறதிக்கும் மத்தயில் படைத்திருக்கிறான்.
அதனால் எல்லா மனிதனும் தவறு செய்யக்கூடியவன். இக்கட்டுரையை
எழுதுகின்ற நானும் தான் தவறுகள் செய்திருக்கிறேன். பேஸ்புக் என்ற
தளத்துக்கு அறிந்தவர்களும் வருகின்றார்கள் அறியாதவர்களும்
வருகின்றார்கள். பேஸ்புக்கை முழுமையாக யாரும் அறிந்து வருவதில்லை
அத்தளத்தில் கால் எடுத்து வைத்து அவசரத்தின் காரணமாக சில தவறுகள்
நமக்கு மத்தியில் நிகழத்தான் செய்கின்றது அவைகளை முழுமையாக
அறியும் போது அத் தவறுகளை தாமதம் இன்றி திருத்திக்கொள்வது தான்
நமது கடமை எனவே நமது வாழ்க்கையை அல்லாஹவுக்கு அவனது
தூதருக்கும் பொருத்தமான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்
நன்கறிந்தவன் அவைகளுக்கு தண்டனை கொடுப்பதும் அவன் கையில்.
ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வை முழுமையாக அஞ்சிக்கொள்ள வேண்டும் .நாளை மறுமைவாழ்க்கையை அஞ்சிக்கொள்ள வேண்டும். நாம் செய்கின்ற
நன்மை நமக்குமட்டும் தான் நாளை மறுமையில் பயன் தரும்.
யாரும் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள் அல்லாஹ்வைத் தவிர.
நமது வாழ்க்கையில் எவ்வளது சொந்தங்கள், உறவுகள் இருக்கின்றது
அவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் பாணங்களை அருந்தவைக்கலாம்
நாளை மறுமையில் நரக நெருப்பை விட்டும் நம்மைப்பாதுகாத்துக்
கொள்ளவேண்டும்.
எனவே நாம் வாழ்ந்து விட்டோம் அதிகமான காலம்
வாழப்போகிறோம் குறிகிய காலம் அது நிமிடமாகவும் இருக்கலாம்,
வினாடியாகவும் இருக்கலாம் நாற்கலாகவும் இருக்கலாம்.மாதங்கள்,
வருடங்களாகவும் இருக்களாம் அவைகள் அல்லாஹ்வின் நியதிப்பிரகாரம்
நடை பெறும். இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள் இஸ்லாம் என்ற கோட்பாட்டை
அடிப்படையாக வைத்து பேஸ்புக் என்ர தளத்தில் உண்மை முஃமின்களாக
வளம் வர வேண்டும் நல்ல பல கருத்துக்களுக்கு நாம் தளம் இறங்க
வேண்டும். நமக்கு மத்தியில் சகோதரத்துவம் உண்டாக வேண்டும்,
போட்டி,பொராமை,வஞ்சகம்,துரோகம்,விரோதம்,புறம் பேசுதல்,பொய்
பேசுதல் , நய்யாண்டி செய்தல் போன்ற கேடு கெட்ட செயல்களை விட்டும்
நம்மை நாம் பாது காத்துக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த பேஸ்புக் மூலம் நன்மையை
செய்வதற்கும் தீமையைத் தடுப்பதற்கும் நல்லருள் புரிவானாக
என சொன்னவனாக இக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.....
............................................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..............................................................
தொகுப்பு...
அஹமட் யஹ்யா...
ஹொரோவபதான.
அனபராதபுரம்.
SRI LANKA.
https://www.facebook.com/ahamedyahya50
____________________________________*************_________________________________
No comments:
Post a Comment