நஷ்டவாளர்கள்..
குர்ஆன் கூறும் வசனம்..
இவர்கள் அல்லாஹ்வின் உடன் படிக்கையை உறுதிப்படுத்திய
பின்னரும் அதை முறித்து, இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ்
கட்டளை இட்ட (இரத்தபந்தத்) தை துண்டித்து, பூமியில் குழப்பம்
விளைவிக்கின்றனர். இவர்களே நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 2:27)
இதன் பின்னரும் நீங்கள் புறக்கணித்தீர்கள். அல்லாஹ்வின் அருளும்,
அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் நீங்கள்
நஷ்டவாளர்களாக ஆகியிருப்பீர்கள்.
(அல்குர்ஆன். 2:64)
எவர்களுக்கு நாம் வேதத்தை வழங்கி அவர்கள் அதை முறைப்படி ஓதி
வருகின்றனரோ, அவர்கள் தாம் அதை நம்பிக்கை கொள்கின்றார்கள்.
யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாம் நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 2:121)
யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகிறானோ அது
அவனிடமிருந்து அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவன் மறுமையில்
நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்.
(அல்குர்ஆன். 3:85)
நம்பிக்கை கொண்டோரே நிராகரித்தோருக்கு நீங்கள் கட்டுப்பட்டால்
உங்களை நீங்கள் வந்த வழியை (உங்கள் மார்க்கத்தை விட்டும்)
திருப்பி விடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டவாளர்களாக
மாறிவிடுவீர்கள்.
(அல்குர்ஆன். 3:149)
நிச்சயமாக நான் (ஷைத்தான்) அவர்களை வழிகெடுப்பேன் .போலியான
எண்ணங்களை அவர்களுக்கு உண்டுபண்ணுவேன். இன்னும் நான்
அவர்களுக்கு ஏவுவேன். அப்போது அவர்கள் (தெய்வங்களுக்காக
விடப்பட்ட) கால்நடைகளின் காதுகளை நறுக்கி விடுவர். மேலும்
அவர்களுக்கு நான் ஏவுவேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின்
படை(ப்பின் அமை)ப்பை நிச்சயமாக மாற்றி விடுவர். (என்றும்
கூறினான்.) யார் அல்லாஹ்வை அன்றி ஷைத்தானைப்
பாதுகாவளனாக எடுத்துக்கொள்கின்றானோ அவன்
நிச்சயமாக தெளிவாகவே நஷ்டத்தை அடைந்து விட்டான்.
(அல்குர்ஆன். 4:119)
இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு
உள்ளது.மேலும் உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்
பட்டுள்ளது. நம்பிக்கையாளர்களிலுள்ள கற்பொழுக்கமுள்ள
பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்
பட்டோரில் உள்ள கற்பொழுக்கமுள்ள பெண்களையும் (நீங்கள்)
கற்பொழுக்கம் பேணி விபச்சாரத்தில் ஈடுபடாமலும்,
வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளாமலும் அவர்களுக்
குரிய மணக்கொடைகளை அவர்களுக்குக் கொடுத்து
(மணம் முடித்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்
பட்டுள்ளது.) எவர் நம்பிக்கை கொள்வதற்குப்பதிலாக
நிராகரிக்கிறாரோ அவரது செயல் நிச்சயமாக
அழிந்து விடும். இன்னும் அவர் மறுமையில்
நஷ்டவாளர்களில் உள்ளவராவார்.
(அல்குர்ஆன். 5:5)
எனது சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான
இப்பூமியில் நுழையுங்கள். நீங்கள் புறமுதுகிட்டு ஓடாதீர்கள்.
அவ்வாறெனில், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்.
(என்று மூஸா கூறினார்.)
(அல்குர்ஆன். 5:21)
அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை
செய்தவர்களும், அல்லாஹ் தமக்கு (உண்ண அனுமதி) வழங்கியதை
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி, தடுத்துக் கொண்டோரும் நிச்சயமாக
நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள்
அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
(அல்குர்ஆன். 6:140)
யாருடைய (நன்மையின்) நிறைகள் குறைந்து விடுகிறதோ, அவர்கள் தாம்
நமது வசனங்களுடன் அநியாயமாக நடந்து கொண்ட காரணத்தினால்
தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டோராவர்.
(அல்குர்ஆன். 7:9)
அவ்விருவரும் (ஆதமும், தன் மனைவியும்.) எங்கள் இரட்சகனே
நாங்கள் எங்களுக்கே அநியாயம் செய்து கொண்டோம். நீ எங்களை
மன்னித்து எமக்கு அருள் புரியவில்லையாயின் நிச்ஜயமாக நாம்
நஷ்டவாளர்களில் உள்ளவராவோம், என்று அவ்விருவரும்
(பிராத்தித்துக்) கூறினர்.
(அல்குர்ஆன். 7:23)
அல்லாஹ்வின் சூழ்ச்சியை அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா.?
நஷ்டவாளர்களான கூட்டத்தைத் தவிர வேறு எவரும்
அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன். 7:99)
யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றானோ, அவரே நேர்வழி
பெற்றவர். எவர்களை அவன் வழி கேட்டில் விட்டு விடுகின்றானோ
அவர்களே நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 7:178)
நிச்சயமாக நிராகரித்தோர் அல்லாஹ்வின் பாதையை விட்டும்
(பிறரைத்) தடுப்பதற்காகத் தமது செல்வங்களை செலவளிக்கின்றனர்.
மேலும் அவற்றைச் செலவளிப்பார்கள். பின்னர் அது அவர்களுக்கே
கைசேதமாக அமையும். பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.
இன்னும் நிராகரித்தோர் நரகத்தின் பக்கம் ஒன்று
திரட்டப்படுவார்கள்.
(அல்குர்ஆன். 8: 36)
அல்லாஹ் நல்லவரிலிருந்து கெட்டவனைப் பிரிப்பதற்காகவும்.
கெட்டவனை ஒருவனுடன் மற்றவனை ஆக்கி அவர்கள் அனைவரையும்
குவித்து நரகத்தில் போட்டு விடுவதற்காகவும் (ஒன்று திரட்டுவான்)
அவர்கள் தாம் நஷ்டவாளர்கள்.
(அல்குர்ஆன். 8:37)
அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தோரில் நீர் ஆகி விட
வேண்டாம். அவ்வாறாயின் நீர் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவீர்.
(அல்குர்ஆன். 10 :95)
நஷ்டவாளர்கள் பற்றி அல் குர்ஆன் வசனங்கள்
பேசுகின்றது.........
(11: 20, 22, 47)-- (16: 108, 109)--(17:82)-- (18:103, 104)
(22:11)--(23:103)--(27:4, 5)--(35:39)--(39:15, 63, 65)--(40:85)
(41:23, 25)--58:19,63,69)
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(103:1-3)
No comments:
Post a Comment