Followers

Thursday, October 11, 2012

விளங்கவும், செயல்படுத்தவும் எளிதான இறைவேதம்!


 

  • விளங்கவும், செயல்படுத்தவும் எளிதான இறைவேதம்!
                                                                       


    54:17. நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? 39:27. இன்னும் இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

    3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கிறது. 6; 90. "இதற்காக நான் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. 16:89. அது (குர்ஆன்) யாவற்றையும் தெளிவாய் விவரிக்கக் கூடியதாய் இருக்கிறது ...



                                             
  • இறை வசனங்களை பொய்ப்பிப்பவர் யார்?
                                                       

    39:53. "என் அடியார்களே! . (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன் "(! என்று நான் கூறியதை நபியே) நீர் கூறுவீராக 39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.


    39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். 39:56. "அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே "! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்; 39:57. அல்லது: "அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்; 39: .58. அல்லது: வேதனையை கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகி விடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்; 39:59. (பதில் கூறப்படும்) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் (நிராகரிப்பவர்களில்) ஒருவனாக இருந்தாய்." 39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம (இறுதி தீர்ப்பு) நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரத்தில் இருக்கிறதல்லவா?









    அஹமட் யஹ்யா.
    ஹொரோவபதான.
    அனுராதபுரம்.
    இலங்கை.
    *****************
  • No comments:

    Post a Comment